Friday, 21 October 2016

அஷ்டகர்ம மூலிகை

[08:08, 10/22/2016] +91 77601 51307: சகலத்திர்கும் கட்டு மந்திரம்.
01:00 by ஸ்ரீ அஷ்டவராஹி தெய்வீகம்
சகலத்திர்கும் கட்டு மந்திரம்.
ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம                      
++++++++++++++++++++++++++++++
அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு

பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.

1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்

மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்

மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல்.

பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.

நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.

மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம், வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை, கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.

5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.

பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி                      

வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.

விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,

பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,

கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.
                   
மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்.

Monday, 3 October 2016

குண்டலினி

குண்டலியை எப்படி எழுப்புவது.
***********

உண்மை ஆன்மிகம் - குண்டலியை நாம் எழுப்ப
கூடாது.

நான் எழுப்புகிறேன் என்று சொல்லும்
கோடான கோடி மக்கள் இறந்துவிட்டார்கள்.
(சொல்லிகொடுதவனும் கற்றுகொண்டவனும்)

சரியான அறிவும் வழிகாட்டலும் இல்லாமல்
குண்டலினி யோகத்தை மேற்கொள்பவர்கள்
கவனத்திற்கு !

ஆன்மீகம் வியாபாரமாக மாறி கடைவீதிக்கு வந்ததும் முதன் முதலில் வியாபார பொருளான விஷயமும் அதிகம் விற்கும் பொருளின் பெயர் என்ன தெரியுமா? - #குண்டலினி.

ஹேமாமாலினியையும், ஜெயமாலினியையும் தெரியாதவர்கள் கூட நம் ஊரில் இருப்பார்கள். ஆனால் குண்டலினியை பற்றி தெரியாதவர்கள் மிகக்குறைவு.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு.
ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்பட
ுகிறது.

ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது.

குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண பெட்டகத்தில் இருக்கிறது. பாம்பின் வடிவில் மூன்று சுற்று சுற்றி மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்ரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது குண்டலினி யோகத்தின் அடிப்படை.

பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது.

குண்டலினியை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் பதஞ்சலியை துணைக்கு கூப்பிடுவார்கள். அவரின் சிலையை வைத்து வழிபடுவார்கள்.

இதில் வேடிக்கையான விஷயம் பதஞ்சலி விக்ரஹத்தை பாம்பு வடிவில் சித்தரித்து இருப்பார்கள்.

குண்டலினி பாம்பு வடிவில் இருப்பதாக நம்புவதால் அச்சக்தியை குறிக்கும் வகையில் பதஞ்சலி பாம்பாகிவிட்டார்.
உண்மையில் பதஞ்சலி நேரடியாக குண்டலினியை பற்றியோ ஆதார சக்ரங்களை பற்றியோ கூறவில்லை...!

முன்பு ராஜயோகத்தை பயில்பவர்கள் குருவை நாடி தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள்.
யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதால் இதற்கு ராஜயோகம் என பெயர். மேலும் ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது ராஜயோகம் என பெயர் பெற்றது.

அரசாங்க (ராஜாங்க) விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ அதுபோல ராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதுமானது. ஆனால் தற்சமயம் ராஜயோகம் நடைபாதையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது.
எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா? இதுக்கும் ரகசியமா? ஏதாவது ஜாதி சார்ந்த கட்டுப்பாடுகள் உண்டா என நினைத்தால் அது தவறு..!

குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்கு கற்று தரும் விஷயமல்ல. இது குரு சிஷ்யன் என்ற இருவருக்கும் ஏற்படும் அனுபவம். அதனால் அவர்களால் அதை விவரிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.

ஆனால் தற்சமயம் குண்டலினி யோகத்தை ஒருவர் பல நூறு நபர்களுக்கு ஒரே வகுப்பாக எடுப்பது வியாபாரத்தின் அடையாளம் எனலாம்.
பல்வேறு ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவி இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் தாம்பத்திய உறவு இயல்பானது இதற்கு கடினமான பயிற்சிகள் தேவையில்லை. இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும் , அவர்களிடம் உங்களுக்குள் நடந்த விஷயத்தை படிப்படியாக கூறுங்கள் என கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும் என்பது என் கருத்து.

மேலும் கணவனோ மனைவியோ பொது இடத்தில் தங்களுக்குள் நிகழ்ந்ததை ஒவ்வொன்றாக விளக்கினால் நாம் முகம் சுளிப்போம் அல்லவா? அதனால் தான் சொல்லுகிறேன், இது நிகழவேண்டியது அல்ல அனுபவமாக உணர வேண்டியது.

தற்சமயம் ஒரு எழுத்தாளர் கூட தன் குரு தனக்கு கொடுத்த குண்டலினி அனுபவத்தை மேடைக்கு மேடை விளக்குகிறார்.
இவரை பார்த்து பிற ஆன்மீகவாதிகள் நெளிவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்கள் உண்மை. ஆனால் அதற்காக தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது.

உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.

சில யோக கழகங்கள் கார்ப்பரேட் மேனேஜர்களுக்கான குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கான குண்டலினி யோகம் என நடத்துகிறார்கள்.

பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா?
தினமும் வீட்டிலும், வாரம் ஒரு முறை கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும
், தினமும் புகைப்பிடிப்பவர்களுக்கும், தங்களின் உடலை சிறு அசைவு கூட செய்யாமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகள்.

 இவர்களுக்கு ஏழு நாளில் குண்டலினி உயர்த்திகாட்டுகிறார்களாம் இந்த யோக கழகங்கள்.
இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் எவரும் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என கூற மாட்டார்கள்.

பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என கூறுவார்கள். இது எப்படி நிகழ முடியும்?

ஒரு ஏமாற்று பேர்வழி பலரிடம் பணம் பறிக்க கடவுளை காட்டுகிறேன் என அனைவரிடமும் பணம் வசூலித்து மலை உச்சிக்கு கூட்டு சென்றானாம். அங்கே கடவுள் தெரிகிறார். அவர் பத்தினி கணவனின் கண்களுக்கே தெரிவார் என சொன்ன கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போன்றதே இந்த குண்டலினி அனுபவமும்.

ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்கு வந்தாகிவிட்டது. தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான். நாம் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ என தங்களை தாங்களே பலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ராஜ யோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவியோடு ஒப்பிட்டார்கள் என்றேன் அல்லவா?
ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு கலவி பற்றி கற்றுக்கொடுத்தால் அவனால் அதற்குரிய அனுபவம் ஏற்படுமா என சிந்திக்க வேண்டும்.

அவனுக்கு உடலாலும், மனதாலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய கற்றது பயன்படாது. அது போன்றதே ராஜ யோகம் என்பதை உணருங்கள்.

ராஜயோகம் பயிலும் பொழுது பல்வேறு உடல் மற்றும் மன உபாதைகள் வரும். அதை சரியான குருவின் வழிகாட்டுதலால் மட்டுமே களைய முடியும்.

அப்படி என்ன உபாதைகள் வரும் என கேட்கிறீர்களா?

குண்டலினி பயிற்சியில் சில மாற்றங்கள் உடல் அளவிலும், மன அளவிலும் நடக்கும் என்றேன் அல்லவா?

ஜப யோகம் எடுத்துக்கொண்டால் நீங்கள் குரு கொடுக்கும் மந்திரங்களை தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் சரியாக ஜபம் செய்யாவிட்டால் ஒன்றும் நிகழப்போவது இல்லை. கால விரயம் மட்டுமே ஏற்படும்.

சரியாக ஜபம் செய்தால் ஆன்மீக அற்றலில் மேம்பட்டு இறைநிலையுடன் இணைவீர்கள்.
பிற யோக முறைகளை விட குண்டலினி பயிற்சி குருவின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே பயில வேண்டும் என கூறுவார்கள்.

காரணம் இதை சரியாக பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் பின்விளைவுகள் உண்டு..!

இவ்விளைவுகளை தீர்க்கும் ஆற்றல் குருவுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவருடன் வாழ்ந்து அவரின் முன் இருந்து பயிற்சி செய்வது அவசியம்.

ஆனால் நடை முறையில் இவ்வாறு இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்றே பதில் கூற முடியும்.

ராஜ யோக சதனா செய்யும் பொழுது உடலின் வலிமை முதலில் முற்றிலும் இழந்து பிறகு பெற வேண்டி இருக்கும். உடல் தன் இயல்பை தொலைத்து புது வடிவம் பெற துவங்கும் பொழுது உடலின் வெப்பம் மிக அதிக அளவில் உருவாகும். அல்லது கடுமையான குளிர் உணர நேரும்.

சராசரி மனிதன் 105 டிகிரி உடல் வெப்பம் கண்டாலே உடனடியாக மருத்துவரை நோக்கி ஓடுவான். அப்படி இருக்க இத்தகைய பயிற்சியில் 116 முதல் 122 வரை உடல் வெப்பம் உயருவது சாதாரணமாக நடக்கும்.

இது மனித உணர்வால் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வெப்பம். அதே போல குளிரும் மிகவும் கற்பனைக்கு எட்டாத நிலையில் இருக்கும்.
தமிழகத்தில் சித்திரை மாதத்தில் -5 டிகிரி குளிர் என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

அனேகமாக முன் தெளிவு இல்லாமல் இப்பயிற்சி செய்பவர்களுக்கு நிகழ்வது இதுதான்.
அதிக உடல் வெப்பத்தால் மூல நோய் மற்றும் ரத்த வாந்தி ஏற்பட்டு தொடர் ரத்த இழப்பு ஏற்படும் அல்லது அதிக குளிரால் உடல் இரத்தம் உறைந்து இருதய துடிப்பு நிற்கும் அபாயம் உண்டு.

மஹா ஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்து யோக முறைகளையும் முயற்சித்து அதன் உச்சியை அடைந்தவர்.
அவர் குண்டலினி யோகம் பயிற்சி செய்து அவரின் பற்களில் தொடர்ந்து ரத்தம் கசிய துவங்கியது. இடைவிடாமல் இரத்தம் வாய்வழியே வந்து கொண்டே இருந்தது. ராம கிருஷ்ணரின் குரு அச்சமயம் வந்து அவரை சரியாக்கி மேம்படுத்தினார். இச்சம்பவத்தை அவரின் சரிதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் நிலையை யோசித்து நாமும் முயற்சி செய்வது நல்லது..!

நடைமுறையில் குண்டலினி பயிற்சி அளிப்பவர்கள் ஏழு சக்கரங்களின் படங்களை பெரிதாக காண்பித்து இன்ன சக்கரம் இது செய்யும் என விளக்கி பிறகு பயிற்சி கொடுக்கிறார்கள். இதனால் மனித மனம் தன் நிலையிலிருந்து மேம்படாமல் கற்பனை எனும் பாழும் கிணற்றில் விழுகிறது. மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே கதையாகி விடும் அல்லவா?

அப்படியானால் இதை எவ்வாறு பயிற்சி கொடுப்பது?

எனக்கு தெரிந்த ஒரு யோகி தன் சீடனுக்கு பயிற்சி கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார் குண்டலினி என்பதில் இது எல்லாம் ஏற்படும் என்கிறார்.

சிஷ்யன் சரி நீங்கள் பல மணி நேரம் விளக்கியதை பார்த்தால் இதற்கு பல நாட்கள் அனுபவம் மேற்கொண்டால் மட்டுமே உணர முடியும் போல இருக்கிறது என்கிறார்.

அதை மறுத்த குரு தன் சிஷ்யனுக்கு முழு அனுபவத்தையும் ஆறு நிமிடத்தில் உணர்த்துகிறார்.

அனுபவம் கிடைத்ததும் சிஷ்யன் சொல்லுகிறான், குருவே நீங்கள் கூறியவிஷயம் எல்லாம் நான் அனுபவித்தேன் ஆனால் ஒரு குறிப்பிட்ட சக்கரத்தில் நீங்கள் கூறியது போல இல்லையே...

அதில் சில விஷயங்கள் கூட இருந்தனவே என்கிறான். அதற்கு குரு கூறுகிறார், “நீ உண்மையாகவே அனுபவம் கொள்கிறாயா அல்லது கற்பனை செய்கிறாயா என காணவே அவ்வாறு முக்கிய சில கூறுகளை விட்டு விட்டேன். மேலும் நீ அதில் கண்ட காட்சி இப்படி இருந்ததா..” என நீள்கிறது அவர்களின் சம்பாஷணை.

 இவ்வாறு குரு சிஷ்யனும் ஒன்றிணைந்து அனுபவிக்க வேண்டியதே ராஜயோகம்.

நம் உபயோகப்படுத்த ஒரு பொருளை கடைகளில் வாங்குகிறோம் என்றால் அது நமக்கு உபயோகப்படுமா? அல்லது நம் வாழ்க்கை முறைக்கு தொந்தரவு கொடுக்குமா என பார்ப்போம். இது தானே நடை முறை? ஆனால் குண்டலினி பயிற்சி பெறும் பலருக்கு இதன் அவசியம் தெரியாது.

சிலர் எனக்கு முதுகு வலி உண்டு அதனால் இப்பயிற்சி செய்கிறேன் என்கிறார்கள். இது உடல் வலிக்கு யானையை அழைத்து மசாஜ் செய்வதை போன்றது.

சில யோக பயிற்சி கழகங்கள் முழுமையான அதிக சிக்கல்கள் கொண்ட பயிற்சியை சராசரி மனிதனுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் ராஜயோக பயிற்சியை உணர்ந்தார்களா என தெரியாது.
ஆனால் முழு பயிற்சியையும் வருபவர்களுக்கு சுண்டல் வழங்குவதை போல வழங்கிவிடுகிறார்கள்.
ஏழு நாட்களில், மூன்று மணிநேர பயிற்சிக்கு பிறகு பயின்றவரும் வீட்டுக்கு வந்து கடுமையாக பயிற்சி செய்வார். இது எப்படி இருக்கிறது தெரியுமா?

ஒருவருக்கு தியரி முறையில் விமானத்தை பற்றி கூறிவிட்டு வீட்டுக்கு சென்றதும் விமானத்தில் கயிரால் உடலை கட்டிக்கொண்டு வானில் பறக்க முயல்வதற்கு சமம்.

குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழுதி அதில் உண்ணும் உணவு முறை முதல் நாம் வாழும் வாழ்க்கை முறை பற்றி கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் எழுதி இருக்கிறார்.

வேதாந்த ரகசியம் என்ற அந்த நூலையே குருவாக கொண்டு பயிற்சி செய்யவும் கூறுகிறார்.

 இவ்வாறு பலர் முயற்சிக்கிறார்
கள். அதில் தவறு அல்ல. காரணம் அந்த புத்தகம் ஓர் அனுபவ வடிவம். இல்லையேல் குருவினை நாடி பயிற்சி செய்யுங்கள்.

குண்டலினி பயிற்சி செய்வதாலும் தவறாக செய்வதாலும் கீழ்கண்ட உடல் மற்றும் மன ஏற்றத்தாழ்வுகள் நிகழும்.
கடுமையான மூல நோய்
எதிர்பாராத நிலையில் தன் நினைவு இழத்தல்
உடல் வெப்பம் அதிகரித்தல்
சுவாச கோளாருகள்
பக்க வாதம் போன்று ஒரு பக்க உடல் செயல்படாமல் இருத்தல்
கண்பார்வையில் ஏற்றத்தாழ்வுகள்
மன நிலையில் ஏற்படும் மாற்றத்தால் உங்களின் இயல்பு குணம் சென்று குழந்தை தன்மையோ அல்லது ஆழ்ந்த அமைதியோ ஏற்படுதல்.

மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருந்தால் குண்டலினி யோகம் பயிலலாம்.

இக்கட்டுரையின் முதல் பாகத்தை படித்து ஒருவருவர் என்னிடம் தனி மடலில் பின்வருமாறு கேட்டிருந்தார்.

“நான் ஒருவரிடம் எளிய முறை குண்டலினி பயிற்சி கற்றேன். அதில் எனக்கு நீங்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..இத
ை நீங்கள் ஏன் தவறாக காண்கிறீர்கள்” என்கிறார். இவர்களை போன்று கேட்பவர்களுக்கு என் பதில் இதோ..

“ஐயா.. குண்டலினி என்ற பெயரில் நடப்பதெல்லாம் குண்டலினி பயிற்சி அல்ல. அப்பெயரை கொண்டு சாதாரண யோக ஆசனங்களை கொண்ட பயிற்சியே பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சியை கற்று எனக்கு குண்டலினி ஒரு நாள் எழும் என கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம்
. அல்லது தினமும் பயிற்சி செய்யும் பொழுது என் குண்டலினி என் ஆக்னா சக்ரத்திற்கு ஏற்றி இறக்கினேன் என நீங்களே நினைக்கலாம்.

குழந்தைகள் ஓடத்துவங்கும் காலத்தில் கால்களை தரையில் உதைத்து வாயில் சப்தம் எழுப்பி பைக் ஓட்டுவார்கள்.

அவர்களுக்கு லைசன்ஸ் தேவையில்லை, ஹெல்மெட் தேவையில்லை. காரணம் அவர்களுக்கு விபத்து ஏற்படாது. அவ்வாறு அவர்கள் கீழே விழுந்தாலும் சிராய்ப்பு ஏற்படும் அவ்வளவே.. நீங்கள் பெற்ற குண்டலினி பயிற்சியும் அத்தகையதே என்பதால் உங்களுக்கு எதுவும் நிகழவில்லை.

பயிற்சியில் உங்கள் உடல் மற்றும் மனம் மாற்றம் ஏற்பட்டால் நம்மால் உணரமுடியாமல் இருக்கமுடியாது. அவ்வாறு ஏற்பட்டமல் போனால் அது எவ்விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள்.”

உங்களுக்கு ஏன் இந்த வேலை?
யாரோ யாருக்கோ குண்டலினி பயிற்சி கொடுக்கிறார்கள் உங்களுக்கு என்ன இழப்பு என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். தவறான பயிற்சியாலும், தவறாக பயின்றதாலும் பலருக்கு உடலில் மற்றும் மனதில் ஏற்படும் நோய்களை யோக முறையிலேயே சரியாக்க என்னைத்தான் அழைக்கிறார்கள்.

இதை நான் பெருமையாக சொல்லவில்லை.
வருத்தத்துடன் சொல்லுகிறேன்.
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் அதிகமாகிவிட்டது.

பாதிக்கப்பட்டவர்களை கண்டு அவர்களுக்கு குணமளித்துவிட்டு சும்மா இருக்க என்னால் இயலவில்லை. பலருக்கு முன் தெளிவு கொடுக்கவே இந்த கட்டுரை எழுத தேவை ஏற்பட்டது.

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!
************

முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து
வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு.

விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.

வாசியடக்கும் வகை வாசியினால்
கெட்டர்களைச் சொல்லியது
காணப்பா மூச்சடக்கிச் செத்தோர் கோடி
கண் தெறித்துச் சூலையிலே மாண்டோர்
கோடி
தோணப்பா மெய் மறந்துப் போனார் கோடி
சுற்றெழும்பி கெடத்தோடே விழுந்தோர் கோடி
ஊணப்பா உண்ணாக்கால் அடைப்போர் கோடி
உள்ளடக்கிக் கோழியைப்போல மடிந்தோர்
கோடி
சாணப்பா முழம் அப்பா எழுந்தோர் கோடி
தப்பிவிட்டு அற்பர்களாய் இருந்திட்டாரே
பாடலில் சரியான அறிவும் வழிகாட்டலும்
இல்லாமல் குண்டலினி யோகத்தை
மேற்கொள்பவர்கள் தமது கபாலம் வெடித்து
சாவர் என்று கூறிய அகத்தியர் இப்பாடலில்
மேலும் பல ஆபத்துக்களைப்
பட்டியலிடுகிறார்.

கோடிக்கோடி மக்கள்
இப்பயிற்சிகளினால்

(1) தமது மூச்சை அடக்கி
மாண்டுள்ளனர்,

(2) கண்கள் தெறித்து
இறந்துள்ளனர்,

(3) சூலை நோய் எனப்படும்
கடுமையான வயிற்றுப் புண்களால்
மரணத்தைத் தழுவியுள்ளனர் (வயிற்றில்
சூலத்தால் குத்துவதைப் போல வலிப்பதால்
இந்த நோய் சூலை என்ற பெயரைப் பெற்றது),

(4) தமது உடலுணர்வை இழந்துள்ளனர், தாம்
உடல் பெற்றுள்ளோம் என்பதையே அறியாமல்
இருக்கின்றனர்,

(5) (அதிகரித்த சக்தியினால் )
மேலும் கீழும் குதித்து உடலுடன் கீழே
விழுகின்றனர்,

(6) உண்ணாக்கை மறித்து
(அமிர்தம் ஏற்பட) கோழியைப் போலக்
கொக்கரித்து இறந்துள்ளனர்

(7) தமது
குண்டலினி சக்தியை ஒரு சாண் அல்லது
முழம் மட்டுமே எழுப்ப சக்தி பெற்று
அதையும் இழந்துவிட்டு அற்பர்களாக
இருக்கின்றனர் என்று அகத்தியர் கூறுகிறார்.

சிவனையோ அல்லது அகத்தியரையோ
அல்லது
யாரேனும் முற்றுபெற்ற மகானையோ வணங்க
வணங்க. தகுதி வரும்போது தானே எழும்.
அதுதான் வெற்றியும் கொடுக்கும்.

"ஓம்அகத்தீசாய நம" என்று தொடர்ந்து
சொல்லுங்கள் தானே உணரலாம.

தகுதி வரும்போது அனைவரும் தேர்ந்தெடுக்க படுவோம் அதுவரை இயல்பான பயிற்சியே சால சிறந்தது

இதையும் மீறி நான் முறையற்ற பயிற்சி செய்வேன்.. அந்தரத்தில் பறப்பேன், போன ஜென்மத்தை உணர்வேன் என நீங்கள் கிளம்பினால்....

உங்களுக்கு என் மனமார்ந்த ப்ரார்த்தனைகள்.

Thursday, 29 September 2016

பாரம்பரிய மருத்துவ முறைகள்

பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? 

நீங்கள் அறிந்துகொள்ள சித்தர்கள் பயன்படுத்திய பல வகையான மருத்துவ முறைகள்! 

இன்று அவைகள் தனித்தனி மருத்துவ முறைகளாக உள்ளது.

மருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித்த தகவல்கள். 

மருத்துவத்தில் உடலுக்கு மட்டும் மருந்து கொடுப்பது, மனதிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, ஆன்மாவிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, இந்த மூன்றிற்கும் சேர்த்தும் கொடுக்கலாம்.

அப்படிப்பட்ட மருத்துவ முறைகள் நமது நாட்டில் இப்போது பயன்பாட்டில் முப்பத்தி நான்கு (34) மருத்துவ முறைகள் உள்ளன.

அவற்றின் பெயர்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. சித்த மருத்துவம் (Sidha)
2. ஆயுர் வேத மருத்துவம் (Ayurveda)
3. யூனானி மருத்துவம் (Unani)
4. காந்த மருத்துவம் (Magnetic)
5. ரெய்கி மருத்துவம் (Reikhi)
6. வர்ம மருத்துவம் (Varma)
7. அக்கு பஞ்சர் மருத்துவம் (Acupuncture)
8. அக்கு பிரஷர் மருத்துவம் (Acupressure)
9. மலர் மருத்துவம் (Flower)
10. மெஸ்மரிசம் மருத்துவம் (Mesmerism)
11. ஹிப்னாடிசம் மருத்துவம் (Hypnotism)
12. நம்பிக்கை மருத்துவம் (Hope)
13. மசாஜ் மருத்துவம் (Massage)
14. ஜோதிட மருத்துவம் (Astrology)
15. ரிப்ல்ஸ் மருத்துவம் (Ripples)
16. உடற்பயிற்சி மருத்துவம் (Exercise)
17. பெட் மருத்துவம் (Bed)
18. தியான மருத்துவம் (Meditation)
19. யோக மருத்துவம் (Yoga)
20 வண்ண மருத்துவம் (Colourful)
21. சிறுநீர் மருத்துவம் (Urine)
22. கலை மருத்துவம் (Art)
23. முத்திரை மருத்துவம் (Impression)
24. பெண்டுலம் மருத்துவம் (Pendulum)
25. நவமணி மருத்துவம் (Navamani)
26. அரோமா மருத்துவம் (Aroma)
27. கை மருத்துவம் மற்றும் விரல் மருத்துவம் (Hand & Finger)
28. இசை மருத்துவம் (Music Therapy)
29. எண்ணை மருத்துவம் (Oil Therapy)
30. விழி மருத்துவம் (Eye)
31. சிரிப்பு மருத்துவம் (Laughing Therapy)
32. பிராண சிகிச்சைமுறை மருத்துவம் (Pranic Healing)
33. தொலைவு சிகிச்சைமுறை மருத்துவம் (Distance Healing)
34. மருத்துவ ஆலோசனை பெறுதல் (counseling)

ஆங்கில மருத்துவத்திற்கு பதிலாக பக்கவிளைவுகள் இல்லாத இந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தி நாம் ஆரோக்யமாய் வாழ முயற்சிப்போம்....

"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறைகள் அவசியம்"
"ஆரோக்ய உலகத்தை உருவாக்குவோம்"

Saturday, 24 September 2016

வாசி யோகம்


சித்தர்களின் குரல் shiva shangar

வாசி யோகம்  பற்றிய ஒரு முழுமையான பார்வை .- {பாகம் -1}

{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}

thanks for Raja Krishna Moorthy sir....

மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம்.

வாசியோகம ஏன் செய்ய வேண்டும் .?

மனித பிறவியில் ஒவவோருவரும் பெற வேண்டியது நான்கு சித்திகள் !.

!.காய சித்தி .: அழியும் உடலை அழியாமல் பாது காத்தல்..
“அடங்கினால் ஒன்றும் இல்லை வருவதேது .
அச்சடத்தை வாழ்வித்தால் அவனே சித்தன் “ >>>
அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் ௪௫ மற்றும் ௪௬

2. வேதை சித்தி ::ஒரு பொருளின் அனுதன்மையை மாற்றுதல் . மதிப்பு குறைந்தவற்றை மதிப்பு மிக்கதாக மாற செய்தல் , பயன்படுத்தல், அறவழி பொருள் ஈட்டல் . ஆகியவை வேதை சாகா மருந்து என்ற முப்பூ செய்து முடித்தல் வேதை சித்தி .

3. யோகசிததி . யோகா என்றால் இணைத்தல் என்று பொருள் . பொருள்களை இணைத்து புதிய பொருள் பெறுவது வேதை. அழியும உடலை அழியா உடலாக மாற்ற இறைவனோடு இன்னைத்தல் காய சித்தி
இறைவனோடு இணைந்து ஒன்றிப்போதல் ஞானம் .. இம்முன்றையும் பெறுவதற்கான தொழில் நுட்பம் சொல்வது யோகா .இதில் வெற்றி பெறுதல் யோகசித்தி .

4. ஞான சித்தி .; இதுவே முக்தி . காய சித்தி , வேதை சித்தி, யோகசிததி அடைய வேண்டும் . தன்னுள் இறைவனை ஒளி வடிவில் கண்டு , இறைவனுடன் ஒன்றி, நிலைத்த பேரின்பம் பெற்று , இறைவனாக ஐந்தொழில் செய்தல் ( படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).

வாசியோகா :
-------------------
யோகா என்பதில் பலவிதங்கள் உண்டு . இந்தியர் களின் யோகாவில் முக்கியமானவை

பக்கதி யோகா .: இறைவனிடம் பக்தி செய்து முக்தி அடைதல்

..ஹடயோஹா . உடலை பேணி பலவித பிராணாயாமம் செய்து , பந்த்ம் . முத்திரை , கிரியை ஆகிய முறைகளை பின்பற்றி இறைவனை அடைதல்

கர்ம யோகம் .: நமது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் இறைவனுக்கு அர்பணித்து செய்தல் .அதன் மூலம் இறைவனை அடைதல் .

வாசி யோகம் : இதற்கு அஷ்டாங்க யோகம் , குண்டலி யோகம் , ராஜ யோஹம் , ஆகிய பெயர் உண்டு இதை சிறிது மாற்றி கிரியயோகம் என்றும் சொல்லுவார்கள் .

வாசி யோகத்தில் ௮ அங்கம் உண்டு. அவை . இயம, நியம , ஆசன , பிரணயாம , தாரண , தியான , சமாதி . .

வாசி என்பது காலக் கணக்கோடு , நெறிப்படுத்திய சுவாசம் ,. இந்த நெறிபடுத்திய சுவாசத்தை பயன் படுத்தி . குண்டலி என்னும் சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிர செய்வது . இந்த வலை என்ற ஒளி தான் பூரணம் என்ற இறைவன் இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும் . இந்த சக்திகள் சிததி எனப்படும் . சித்திகள் ௬௪ இருந்தாலும் ௮ சித்திகள் அஷ்டமா சித்திகள் எனப்படும் . அமிர்தம் என்ற சாக சுரப்பை வாலைகொடுக்கும் . இதுவே உடலை அழியாமல் காக்கும் .

வாசி யோகா சிறப்பு .
------------------------------------

அந்நெறி இந்நெறி என்னா தட்டங்கத்
தன்னெறி சென்று சமாதியில் நிலமின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் லேகலாம்
புன்னெறி யாகத்திற் போகில்லையாமே
திரு மூலர் திரு மந்திரம் . பாடல் ௫௫௧ .

உலகில் பலவிதமான யோகா நெறிகள் உண்டு . அந்தநெறி இந்த நெறி என்று எண்ணாமல் அட்டங்கம் என்ற வாசி யோகா நெறியை கடை பிடியுங்கள் . அதில் சமாதி நிலை அடையுங்கள் .

இதனால் ஞானம் அடையலாம். யாகம் போன்ற தவறான வழியால் இறைவனை அடைய முடியாது .
வாசியோகம் செய்வதால் யோக சித்தி யுடன் காய சித்தி , வேதை சித்தி , ஞான சித்தி கிடைக்கும் . வாசி யோகம் செய்யாது பிற சித்தி அடைய முடியாது . . அணைத்து சித்திகளுக்கும் வாசி யோகமே அடிப்படை .

இதை திரு வள்ளுவர் பஞ்ச ரத்தினம் ௫௦௦ என்ற நூலில் பாடல் ௩௧௬ இல் சொளியுள்ளார் .

அட்டாங்க யோகம் அது பலித்திட அருளும் முக்தி .
தொட்டங்கு நின்று துணைய இயம, நியம , ஆசனம
பட்டாங்கில் உள்ளபடி பாவிக்கதற்கு
முட்டாகும் முப்பு முடியாது மொழிந்தேன் இது சத்தியம் .

அட்டாங்க யோகம் என்ற வாசி யோகத்தை தக்ஷனா மூர்த்தி moorthy moorthy சுப்பிரமணியர் , அகத்தியர் , திரு மூலர் , போகர் , ரோமர், காக புசுண்டர், திருவள்ளுவர் மற்றும் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள்.

விஷ்ணு புராணத்தில் பராசர முனியும் , யோக சூத்திரத்தில் பதஞ்சலியும் சொல்லி உள்ளார்கள் .
எனவே உறுதியான உடல் பெற , உயர்ந்த அறிவு பெற , நிறைந்த சக்தி பெற , அறவழியில் நிறைந்த பொருள் ஈட்ட , நிறைவான இல்லறம் நடத்த , அமானுஷ்ய சக்தி பெற உள்ளுறை இறைவனை அறிய , காய சித்தி பெற வேதை சித்தி பெற , ஞானம் சித்தி பெற வாசி யோகம் செய்தல் அவசியம் .

வாசி யோகத்தின் ஒவ்வொரு அங்கமாக பாப்போம் .
படிப்படியாக வாசி யோகம் செயல்முறை பார்போம்....

வாசியோக சந்தேகமும் நிவர்த்தியும்
வாசி யோகத்தில் பிரிவு உண்டா ?

வாசி யோகம் என்பதில் இரண்டு வகை உண்டு . ஒன்று அடிப்படை வாசியோகம் அல்லது வாசியோகம் மற்ற ஒன்று வாசியை வளது இடமாக வாசித்தால் வரும் சிவா யோகம் . சிலர் இரண்டையும் குழப்பிகொள்கிறார்கள் . சிவயோகம் யோகிகலுக்கு மட்டுமே .
 வாசியோகம் இல்லறத தாற்கும செயல் படும்.

வாசி யோகம் யார் செய்யலாம் ? . ...

வாசி யோகத்தில் பிராணயமம் என்பது நான்காம் அங்கம் இதில் வாசி உருவாக்கினால் அது வாசி பிரானாயாமம் . இந்த வாசி பிரானாயமத்த்தில் மூலாதாரம் என்ற குதத்திற்கு மேல் இரண்டு விரல் அகலம் உயரே மனதை பதிய வைத்து வாசி யோகம் செய்தால் யாருக்கும் எந்த துன்பமும் வராது எந்தவயதினரும் இதை செய்யலாம் இது மூச்சுக்காற்றை நெறிபடுத்துதல்
புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிபட உள்லே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே
திரு மூலர் திரு மந்திரம் பாடல் ௫௭௫ .

இது அடிப்படை வாசி யோகம் .. அதுவாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் மூச்சு காற்றை நெறி படுத்தினால் உடல் உறுப்புகள் சிவந்து இளமை யுடன் இருக்கும். முடி கரு மையாக இருக்கும் .

இறைவன் நம்மை விட்டு நீங்கி போகமாட்டன் .. அடிப்படை வாசி யோகத்துடன் மூலிகை கல்பம்கள் உண்ணலாம் .

சிவயோகம் என்பது முப்பு என்னும் சாகா மருந்து உண்டு உயர் நிலை வாசி யோகம் பத்து ஆண்டு செய்வது . இதற்கு குரு உதவியும் பல கட்டுபாடுகளும் உண்டு . . இது மரணத்துக்கு ஒப்பான துயரம் தரும் . முடிவில் அழியா தேகமும் முக்க்தியும் தரும் . இது யோகிகளுக்கு மட்டுமே . இதில் மூன்று தீட்சை மூன்று ஆண்டு முடித்தால் சித்தர் தகுதி தரும் .. நான் முடித்து உள்ளேன் ..

எனக்கு சித்தர்களே குரு
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் புடிக்கும் கணக்கு அறிவாறில்லை
காற்றை புடிக்கும் கணக்கு அறிவாளற்கு
கூற்றை உதிக்கும் குறி அது வாமே .>

திரு மூலர் திரு மந்திரம் பாடல் ௫௭௧
மூலதாரத்தில் கால கணக்கோடு வாசியோகம் செய்து

குண்டலி உரு வாக்கி. சுவதிடணம்.,மனி பூரகம் , அனாகதம், விசுக்தி ஆகயா, ஆகிய ஆறு தலங்களில் வாசியோகம் செய்து மேலே ஏறி குண்ட்லியையும் மேலே ஏற்றி பிடரி வழியாக ஒவொரு தள மாக கிழே இறங்கி மூலா தாரம் அடையவேண்டும் .

அப்பொழு து இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவும் வாசி யோகம் செய்ய வேண்டும் . .

இத்தகைய வாசி யோகம் செய்பவர் யாரும் இல்லை . அப்படி செய்தவர் எமனை எட்டி உதைக்கும் தகுதி படைத்தவர் . இதுr சித்தர்களும் யோகசித்தி அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும் .

இதை தினமும் நான் செய்கிறேன் .. இது சிவ யோகம் இதை கற்றுக்கொள்ள குரு வேண்டும் . $0 வயதிற்கு மேற்பட்டவர் செய்யலாம்
.

அடிப்படை வாசி யோகம் செய்ய தீட்சை பெற வேண்டுமா ?

செய்முறை சொல்லி தருவதே தீட்சை . குரு என்பவருக்கு மாணவர் தட்சனை தரவேண்டும் . குரு கற்று கொடுக்க வேண்டும் ..

இந்தவக்குப்பில் நான் யாருக்கும் குரு இல்லை . வழி காட்டி மாணவர் இயம நியமத்துடன் அன்புடன் இருப்பதே நான் கேட்கும் கட்டணம் . நான் வேறு கட்டணம் கேட்கவில்லை .. நான் சொல்லித்தரும் செயமுரைகளே தீட்சை .

 விருப்பமுள்ளோர் சாங்கியம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி சித்தர் படம் வைத்து அல்லது சாமிபடம் வைத்து சிததரிடம் வாசியோகம் கற்றுதர வேண்டி கொண்டு பயிற்சி ஆரம்பியுங்கள் . வாசி யோகம் சித்தர் சொத்து .. என்னுடையது இல்லை. சித்தரிடம் வேண்டுங்கள் .

இல்லறத்தில் இருந்து கொண்டு வாசி யோகம் செய்யலாமா?

என்யோகம் நின்யோகம் வசிஷ்டர் யோகம் .
இதனிர்தான் நிக்கோடு விசுவாமித்திரர்
இம்மலையில் வியாசரிஷி சுகரின் யோகம்
இதனிர்தான் காகியரும் கும்பனாதர்
இதனிற் தான் தெட்சனத்தர்ர் யோகமோடு
இல்லறத்தில் இருந்தார்கள் பாகமொடு . .

காக புசுண்டர் பெரு நூல் காவியம் .பாடல் ௭௩௬
பொருள்

நான் செய்யும் வாசி யோகமும் நீங்கள் செய்யும் வாசி யோகமும் வஷிஸ்டர் , விசுவாமித்திரர் , வியாச ரிஷி , சுகர் . கக்கியர் . கும்பனாதர் என்ற அகத்தியர் தெற்கு பக்கத்து சித்தர்கள் களும் செய்ததார்கள் இந்த யோகத்தை செய்து கொண்டு இல்லறவாழவிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்

“இல்லறத்தில் இருந்தாலும் முக்தி தானே .”
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல்௫௪௧..

வாசி யோகம் செய்ய தியான மண்டபம் , காடு குகை போகவேண்டுமா ?

வேண்டாம் வீடு போதும் .
வீட்டிலே கூட்டினுள்ளே முக்தி உண்டு
மெய்யிலே சோதி உண்டு திரிகாலங்கள்
இந்த உடம்புக்குள் ஜோதிஎன்ற இறைவன் உண்டு அவனை வீட்டில் இருந்து உடல் என்னும் கூட்டில் கண்டு முக்தி பெறலாம் .

வாசி யோகம் செய்தால் செல்வனம போய் விடுமா ?

இல்லை அறவழி யில் செல்வம் வரும் வறுமை வராது. வந்த செல்வம் போகாது .
வருனையே தாறது யோகம் யோகம்
வாய்த்தாலே போகாது ....காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல் ௮௦௫

குரு தீட்சை கொடுத் தல் முக்தியும் சித்தியும் கிடைக்குமா ?

இல்லை நீங்கள் தான் வாசி யோகம் செய்து முக்தி அடையவேண்டும் . சாஸ்திரங்கள் படித்தோ , குரு தீட்சை பெட்றோ. மந்திரங்கள் ஓதியோ முக்தி பெறமுடியாது . வாசி யோகம் செய்ய வேண்டும் ..

ஆகுமோ சாத்திரத்தால், குருவால் ஆகா
ஆச்சரிய மந்திரத்தால் ஜெப்பத்தால் ஆகா
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் ௭௫௬

இருபது வயதிற்கு கீழ் வாசி யோகம் செய்தவர் விரைவில் மரணம் அடைவார ?

இருபது வயதிற்கு கீழ் சிவயோகம் செய்து முக்தி பெற்றவர் விரைவில் பரு உடல் இழப்பார்கள்.
ஐம்பது வயதிற்கு மேல் தான் வாசி யோகம் செய்ய வேண்டுமா .?

கட்டாயம் இல்லை எந்த வயதிலும் அடிப்படை வாசி யோகம் செய்யல்லாம் சிவயோகம் நாற்பது வயதிற்கு மேல் என்பதுக்குள் செய்யலாம் .

 உடற்பிணி இருப்பவர் வாசி யோகம் செய்யலாமா ?

. முடிந்த வரை செய்யலாம் . முடியாவிட்டால் செய்யவேண்டாம் .

வாசியோகம் செய்ய பத்தியம் உண்டா ?

இல்லை சரிவிகித உணவு எதுவும் சாப்பிடலாம் .. சிலருக்கு சர்கரி . உப்பு சத்து இருந்தால் அதற்கான பத்தியம் காததல் நன்று . நாளடைவில் நோய் கட்டுப்படும். பத்தியமே இல்லையட முப்பதின்
மேல் பாரினிலே யாருக்கும் . .
காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் ௫௩௩

வாசியோகம் ஆரம்பிக்கும் முன் சில தயாரிப்புகள் வேண்டும் . அதற்கு வாசி யுடன் தொடர்புடைய காரணிகள் பார் போம்.

பாரப்பா சென்னியின் நீர் காலனகும்
பார்த்து அறுத்தார் சென்னியின் நீர் பித்தம் தானே
வீரப்ப வளநீரே இடுப்பில் வாதம்
மெய்யதனில் நெஞ்சுதொண்டை விழாவின் பக்கம்
துரப்ப மூலதண்டு நாக்கு மட்டும்
சொல்மொழியும் சேத்துமன் தான் சமனை நின்றால்
காரப்ப நாசிவழி பிராணண் பாரு
கால வாசி நேர்ணடக்க நாக்கு மூக்கே
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் ௮௪௯ 846

பெரும் சித்தி கெடுத்துவிடும் மலமும் பூச்சி. பாடல் ௮௫௩ 853

நோய் கோழை உடற்கு எமன் தானே. பாடல் ௮௪௫ 845.

மனம் மாண்டால் பொருள் உனதோ உடல்தான் மாலும் பாடல் ௮௫௨ 852

தந்தையென்ன இவவுடற்கு மனது தானே பாடல் ௮௪௫ 845

இந்த உடலை அழிப்பவை சென்னியில் இருக்கும் பித்தநீர்.
இடுப்பில் இருக்கும் வாத நீர் . நாக்கு தொண்டை முதுகு தண்டு பேச்சை குலரவைக்கும் சிலேத்துமம் . இம்மூன்றும் சமமாய் இருந்தால் உடல் அழியாது அதற்கு உயிர் சக்தி பெறவேண்டும் . அதற்க்கு வாசிr யோகம் செய்
.

> வாசி யோகம் சிததி அடைவதை தடுக்கும மலத்தில் உள்ள பூச்சி . எனவே அதை போக்க குடலை சுத்தி செய்யவேண்டும் . இதற்கு கடுக்காய் கற்பம் உண்ணவேண்டும் .. இதற்கு தனி பதிவு செய்வேன் .

கோழை உடலின் சளிப்படலம்மாக உடல் முழுவதும் இருக்கும் அதை போக்குவது கடினம் . இதற்கு சித்தர்கள் வழழை வாங்கள் என்ற ஒரு முறை சொல்லி யுள்ளர்கள் .

இதற்கு கரிசாலை , கத்தாழை கடுக்காய் கற்பம் பயன்படும் இதையும் தனி பதிவு செய்வேன்
கோழையும் மலமும் கற்பத்தால் சுத்தி செய்யமுடியும் .

வாசியை தொடர் புடைய முக்கிய காரணி மனம். மனதை பற்றி அகத்தியர் சொன்னது .
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்
சில மூட குருக்கள் இப்பாடலை காட்டி வாசியோகமும் மந்திரங்களும் செய்யவேண்டாம் மனம் செம்மையானால் போதும் என்பார்கள் . இப்பாடலில் உள்ள மறைப்பை அறியார்கள் . . மனம் செம்மை ஆவது எப்படி என்றல் தியானம் செய்யுங்கள் என்பார்கள் . மனம் செம்மையானால் தான் தியானம் கைகூடும் . ஆக மனமும் செம்மை ஆகாது தியானமும் கைகூடாது .

இவர்கள் குழப்பவாதிகள்
சிதர்கள் இந்த மறைப்பை வேறு இடத்தில் விடு விக்கிரார்கள் ..

“சுழிமுனை திறந்தால் மனம் சுழியில்
அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும் “
சுழிமுனை திறக்க வாசி யோகம் செய்ய வேண்டும் .

அப்பொழுதுதான் மனம் செம்மை படும் . வாசி யோகம் செய்து மனதை செம்மை படுத்திய யோகி யின் மூச்சு வாசியாக மாறிவிடும் எனவே அவர் வாசி யோகம் செய்யவேண்டாம் . அவர் சொல்லும சொற்களே மந்திரம் எனவே அவர் மந்திரங்கள் சொல்லவேண்டாம் .

எனவே வாசி யோகமும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையவை . ஆனால் மனதை நெறி படுத்தினால்தான் வாசி யோகமே செய்ய முடியும் .

வாசியோகம் செய்தால் தான் சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கி செம்மை ஆகும் .. யோகம் சித்தி ஆகும் . யோகம் சித்தி ஆனால் ஞானம் சித்தி ஆகும். இதுவே முக்தி . மனதை நெறிபடுத்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படை
..
மனதை நெறிப்படுத்த சித்தர்கள் ஹட யோகிகள் செய்முறை வகுத்தனர்
ஹட யோகிகள் த்ராடக என்ற செய்முறை (தீட்சை) கடை பிடித்தனர்
சித்தர்கள் சூரிய யோகம் சந்திர யோகம் அல்லது சூரிய சந்திர யோகம் என்ற செய்முறை வகுத்தனர் .

இவற்றை ஸ்ரின்கேறி ஜகத் குரு அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் செயதார் . விவேக நந்தர் செய்தார் . இதன் அடிபபடையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது .

இதன் தத்துவத்தை பார்ப்போம் . . மனம் என்பது கண்டு , கேட்டு ., உண்டு , உயிர்த்த புலன் களின் தொகுப்பு . மனதை குவிய செய்ய இந்த ஐந்து புலன்களையும் குவியசெய்தால் மனம் குவியும் . மனம் நெறிப்படும்.

இதற்கான தொழில் நுட்பமே த்ரடகவும் , சூரிய சந்திர
.யோகமும்
நான் சில ஆண்டுகள் இந்த இரண்டு யிற்சிகள் செய்து வெற்றிகண்டேன் அப்பொழுது எனக்கு ௨௭ வயது ..

 இந்தவெற்றியால் என்னுடைய ஆவியை நான் காண முடிந்தது .
ஆரம்ப செய்முறை பயிற்சிகளை சொல்கிறேன் .

த்ரடக .:
**
ஒரு சுவற்றில் உள்ள சுவாமிபடத்தில் சுவாமியின் கண்களை மட்டும் இமை கொட்டாமல் பாருங்கள் . சிறிது நேரத்தில் கண்ணீர் வடியும் . அதன் பின் பழக பழக கண்ணீர் வரத்து நின்றுவேடும் .. சிறிது சிறிதாக நேரத்தை கூட்டுங்கள் . .

இரவில் சிறு பலப் லோ வோல்டேஜ எரியவைத்து அதை இமை கொட்டாமல் பார்த்து பழகுங்கள் . . இதனால் மனம் குவியும் . விவேகானந்தர் தியான கூடத்தில் ஒரு இரருட்டு அறையில் ஓம் என்ற குழல் விளக்கு எரியும் . அதை பார்த்து தியானம் செய்வார்கள் . .

கண்கள் சோர்வு அடையாமல் சிறிது சிறிதாக நேரத்தை கூட்டி செய்யுங்கள் .

சூரிய யோகம் .
-----------------------

ஏதுமென்ற பங்குனி சித்திரை இரண்டில்
இதமாக உதயத்தில் ரவியை பாரு
தேருமடா கண் கூசிடாது இளமை வெயில்
தீர்க்கமாய் பிங்கலையில் கண் மூடிப்பரு .
. நூறு மடங்காய் அருணன் காந்தி வீசும்
நுனியான சுழி முனையில் உற்று பாரு
பேருபெருன்ச் சுளினைஎலே கண் கெடாது .
பேராக இன்னமொரு சேதி கேளு
அகத்தியர் பூஜா விதி ௦௦ பாடல் ௧௧௦

பொருள்
பங்குனி சித்திரை மதத்தில் சூரியன் உதயமாகும் போது சூரியனை பாருங்கள் . கன்னியா குமரியில் சூரிய உதயம் பார்ப்பது போல் . கண் கெடாது பின்பு கண்ணை மூடி மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வளது நாசியில் சுவாசியுங்கள் . அன்நாக்கிற்கு மேல் மனதை நிறுத்தி பாருங்கள் . உள்ளுக்குள் ஒளி தெரியும் ..
தயவு செய்து இதை உடனே செய்ய தீர்கள் த்ரடக செய்து சித்தி ஆனா பின்பு சூரியனை நேரில் பாருங்கள்
யோகதொடக்கம் .
ஆரம்பத்தில் குளித்து மேல் ஆடை இல்லாமல் சூரியன் முன்பு நில்லுங்கள் . ஓம் ந மா சி வ யா என்று 108 முறை சொல்லுங்கள் . . அல்லது உங்கள் விருப்ப ஜெபம் , மந்திரம் சொல்லுங்கள் சுமார் 7muthal 10௦ நிமிடம் செய்தால் போதும் .
இந்த யோகம் சக்தி வாய்ந்தது . ஸ்ரீ ராமர் சூரிய யோகம் செய்து அதித்ய ஹிருதயம் என்ற மந்திரம் ஜெபித்து ராவணனை வென்றார் . சூரிய ஒளி தரும் வைடாமின் டி உணவில் இருந்து கல்சியத்தை பிரித்து உடலின் செல்களுக்கு கொடுக்கும் . கல்சியம் உடலை இளமையாக வைத்திருக்கும் . சூரிய நாடியில் உயிர் சக்தி முழுமையாக பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் ..
பின்பு வீட்டிற்குள் வந்து ஒரு கோரை பாய் அல்லது பருத்தி துணிமேல் சம்மணம் இட்டு நிமிர்ந்துஉட்காருங்கள். உங்கள்ளல் எவ்வளவு மூச்சை இரண்டு நாசியிலும் இளுக்க முடியும்மா அவ்வளவு இழுங்கள் . எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள் . பின்பு வெளிவிடுங்கள் இப்படி 7 முறை செய்யுங்கள் .. இப்படி 10 நாட்கள் செய்யுங்கள் .
வாசி யோகம் பற்றிய ஒரு முழுமையான பார்வை - {பாகம் -2}

{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}

மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம்.

மனதை நெறிப்படுத்த த்ராடக மற்றும் சூரிய யோகம் செய்முறை பார்த்தோம் இந்த பதிவில் சந்திர யோகா செய்முறை பார்போம். .

கேளப்ப பூரனச் சந்திரனை நோக்கி
கெட்டியாய் நவமி முதல் தொட்டுபாரு
ஆலப்ப இடகலையிற் சுலழினை நோக்கி .
அண்டரண்ட தீ எல்லாம் மகன்று போகும்
மாள்ப்பா தீபத்தில் சுழினை நோக்கி
மருவி அங்கே பார்க்கையிலே ஒளிதான் வீசும்
நாளப்ப அறுபதுநாள் இப்படியே பாரு
-அகத்தியர் பூஜா விதி பாடல் ௧௧௧

சந்திர யோகம் என்பது சந்திரனை கண் கொட்டாமல் பார்ப்பது .

 அமாவாசையில் இருந்து ஒன்பதாம் நாள் நவமி நாள் . அன்று இரவு சநதிரை கண் கொட்டாமல் பாருங்கள் . முடிந்தவரை பாருங்கள் அதன் பின் கண்ணை மூடி அன்னகிற்கு மேல் உள்ள சுளழிமுனயில் உள்ளே பாருங்கள் . . உங்களுக்கு சந்திர ஒளி உள்ளே தெரியும் . இவ்விதம் பெளர்ணமி அன்று வரை பாருங்கள் வளது நாசியை பெரு விரலால் அடைத்து இடது நாசிவழி சுவாசிக்கவும் . .. 

அப்பொழுது ஓம் ந மா சி வா ய அல்லது விருப்ப மந்திரம் ஓதலாம் . சக்கிரத அவஸ்தை என்ற நல்ல நினனைவுடன் இதை செய்யுங்கள் .
சூரிய யோகத்தையும் சந்திர யோகத்தையும் அறுபது நாள் செய்யுங்கள் ..

இதன் தத்துவம்
------------------------

நமது இடது நாசி வழி செல்லும் மூச்சு சநதிர கலை . இது சந்திர யோகத்தால் பலப்படும் சந்திரனிடம் இருந்து வரும் உயிர் சக்தி முழுமையாக கிடைக்கும் . இந்த சூரிய சந்திர யோகன்கள்ளல் சூரிய சக்தியும் , சந்திர சக்தியும் வசப்படும் . . உடல்வலுவும் .,மனவலுவும் , ஓங்கும் . மனம் குவியும் . மிகுந்த சக்தி கிடைக்கும் . அறிவு சுடர்விடும் .
நான் இந்த யோகத்தை சில ஆண்டுகள் செய்தேன் . இன்னும் அவ்வப்பொழுது பெளர்ணமி அன்று செய்கிறேன் . . செய்து பாருங்கள் அனுபவம் சொல்லுங்கள்.

அஷ்டாங்க யோகத்தில் நான்காம் அங்கம் பிராணாயமம்.
இந்த பிராணாயாமத்தில் வாசியை உருவாக்கினால்தான் அஷ்டாங்க யோகம் வெற்றி பெறும் ., அதுவே வாசி யோகம் . அது போல் வாசி யோகத்தில் 8 அங்கம் களை கடை பிடித்தால்தான் வாசி யோகம் வெற்றி பெறும் . இந்த 8 அங்கங்களையும் அவற்றை செய்முறை படுத்தவும் திரு மூலர் திரு மந்த்திரத்தில் சொல்வதை பார்போம்.

இயம நியமமே என்னில ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறு அட்டாங்கம் மாவது மாமே
-திருமந்திரம் பாடல் ௫௫௨

அஷ்டாங்க யோகத்தின் 8 அங்கங்கள்
1 இயமம் என்ற ...செய்ய தகாதவை .
2 . நியமம் என்ற ... செய்ய வேண்டியவை 
3.ஆசனம் . யோகா ஆசனம் இவைகள் எண்ணிக்கையில் அடங்காதவை
4. பிராணாயாமம் என்ற சிறப்பான மூச்சு பயிற்சி
5. பிரத்தியாகாரம் தென்ற உடலுள் பார்ப்பது .
6. தாரணை என்ற பாவிக்கும் முறை .
7. தியானம் என்பது மனதை குவித்து ஒன்றின்மேல் இறைவன்மேல் நிறுத்துதல் .
8சமாதி என்ற இறைவனோடு ஒன்றுதல் ஆகிய 8அங்கங்களும் வாசி யோகா அங்கங்கள்.

நமது வழக்கை முறை மனதை பாதிக்கும் அது மூச்சின் செல்பாட்டை பாதிக்கும் . அது நமக்கு இன்புணர்வு அல்லது துன்ப உணர்வை தரும் .. மனம் மகிழஉடன் இருக்க நமது வாழ்க்கை முறை முக்கிய பங்கு கொள்ளும . இதை அடிப்படையாக கொண்டது முதல் இரண்டு அங்கங்களான இயமமும் நியமமும் ஆகும் .. இவற்றை தான் அனைத்து மதங்களும், இயக்கங்களும், பக்தி மார்க்கங்களளும் சொல்கின்றன , திரு மூலர் சொல்வதை பார்ப்போம்.

இயமம். என்ற செய்ய கூடாதவை .
-------------------------------------------------------

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான், அடக்கமுடயன் நடுசெய்ய
வல்லான் பகுந்துஉண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்திடை நின்றானே
-திரு மந்திரம் பாடல் 554.

உயிரை கொல்லாதவன் ,.பொய் சொல்லாதவன் , களவு செய்யாதவன் , . ச நல்லவன். .அடக்கமுடயவன் . நீதி சொல்ல வல்லவன் . தனக்கு கிடைத்ததை பிறர்க்கும் கொடுப்பவன் பகிர்ந்து உண்பவன் . குற்றம செய்யாதவன் . கள் முதலிய போதை பொருள் உண்ணாதவன் வேசித்தனம்இல்லாதவன் . இத்தகைய வாழகை வாழ்பவர் இயமத்தான் . இவரே என்குணன் என்ற இறை வனை அடைய தகுதி பெற்றவர் ..
இதுவே மனித தர்மம் , மனித நேயம் மனிதம் , மனிதனின் கடமை . வேதங்களும் சத்திரங்களும் சொல்பவை . இறைவன் இல்லை என்பவரும் ,பக்தி மான்களும் சொல்லுவது .

நியமம் என்ற செய்ய உகந்தவை
----------------------------------------------------

தவம் செபம் சந்தோசம் ஆததிகம் தானம்
சிவன்றன் விரதம் சித்தாந்த கேள்வி
மகம் சிவபூசை யொன்மதி சொல்லீரைந்தும்
நிவம்பல செய்யின் நியமத்தானாம்
-திரு மந்திரம் பாடல் 557.

!. இறை நம்பிக்கை . 2. அதில் மகிழ்ச்ச்சி. 3. தவம் செய்தல் 4 ஜெபம் செய்தல் . 5. தம்மிடம் மிகுந்த்து உள்ளதை தானம் செய்தல் ,6 இறைவனை அடைய விரதம் ( சிவா விரதம் ) 7. உண்மைகளை அறிய அறிவார்ந்தவர் சொல்வதை கேட்டல் ..8. அகம் என்னும் உள்நோக்கள் 9 இறைவனை பூசித்தல் ( சிவ பூசை ) 10. அறிவுடைய சொல் சொல்லுதல் ஆகிய பத்து செயல்களும் செய்பவர் .

நியமத்தார் இங்கு திரு மூலர் சிவன் என்று சொல்வது ஆதி சிவனாகிய இறைவனைதான் . அவரது காலத்தில் ஏசு, அல்லா என்ற பெயர் இறைவனுக்கு இல்லை ..

 இறைவனை சிவன் என்று சொல்லி உள்ளார் .. . இறைவன் யார் சிவன் யார் என்பதை திரு மூலர் 50 பாடல்களில் திரு மந்த்திரத்தில் சொல்லி உள்ளார் .

அன்பே சிவம்...
இறைவனை அறியவும் , அடையவும் வாசியோகம் செய்யவும் இயம நியம மற்றும் அன்பு அவசியம் .

செய்முறை . . முன் பதிவில் சூரிய யோகம் சந்திர யோகம் , பிராணாயாம ஆரம்பம் ஆகியவை சொன்னேன். பல நண்பர்கள் செய்து பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்தனர் . சந்தேகம் கேட்டு தெளிவு பெற்றனர் . நன்றி . 

வாசி யோகா அடிப்படை ஆரம்பிக்கும் முன் நீங்கள் உங்கள் முச்சு காற்றின் தன்மையை கீழ கண்டவாறு நிர்ணயம் செய்யுங்கள்.

மூச்சு பயிற்சி ஆரம்பிக்கும் முன்
-------------------------------------------------------

!. பாய் அல்லது கம்பளி விரித்து அதன் மேல் ஒரு பருத்தி துணி விரியுங்கள் . அல்லது கனமான ஜமுக்காளம் விரியுங்கள் .

2. காற்று ஒட்டமான அரை நல்லது. .AAACAc ஏசி அரை என்றால் எச்சஸ்ட் மூலம் உள் காற்றை அகற்றியபின் பயிற்சிக்கு அமருதல் நல்லது .

3 ஊர்வன பறப்பன தொல்லை இல்லாமல் இருத்தல் நல்லது .

4.கூரைக்கு கீழ் அமருதல் நல்லது . ஆரம்பகாலத்தில் வெட்ட வெளியில் அமர வேண்டாம் . ,

5. கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமருதல் வேண்டும் .

6.வெறும் வயிற்றில் பயிற்சி செய்தல் நலம் . தவிர்க்க முடியாவிட்டால் திரவம் அருந்தலாம் .

7. உணவு உண்டால் சுமார் 2 மணி கழித்து பயிற்சி செய்தல் வேண்டும்

8. சம்மணம் கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்த்தால் போதும் .இது சுகா ஆசனம் . . பயிற்சி உள்ளவர்கள் பத்ம ஆசனம் அல்லது வச்ரா ஆசனத்தில் அமரல் நன்று கீழே உட்காரமுடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்காரலாம்

9 பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து மதரா மூன்று விரல்களையும் நீட்டி உள்ளங்கை வானை நோக்கி இருக்கும்படி இரண்டு முழங்கால் மீது வைத்துக் கொள்ளுங்கள். இது சின் முத்திரை ..

இதன் பின் மூச்சை கனகிடுகிறோம்.
-------------------------------------------------------

1 மூச்சை உள்ளே இழுக்கும் போது மனதுள் ஒன்று இரண்டு. என்று எண்ணுங்கள். உங்களால் சிரமம் இன்றி எவவளவு என்ன முடியும் என்பதை குறித்து கொள்ளுங்கள். மூன்று அல்லது நான்கு முறை செய்து அதன் சராசரியை குறித்தல் சிறப்பு .. இதன் பெயர் பூரித்தல். இந்த எண்ணிக்கை பூரித்தல் நேரம்

2. மூச்சை உள்ளே இளுத்த பின் மூச்சை உள்ளே நிறுத்துங்கள் . அப்பொழுது மனதுள் ஒன்று இரண்டு என்று எண்ணுங்கள் . சிரமம் வரும் வரை எண்ணுங்கள் இது கும்பகம் என்பது இந்த எண்ணிக்கை கும்பக நேரம் .

3 மூச்சை இழுத்து நிரித்தியபின் சிரமம் வரும் போது வெளிவேடுங்கள் . அப்படி வெளியிடும் போது மனதுள். ஒன்று இரண்டு என்று எண்ணுங்கள். . இதன் பெயர் ரேசகம். இந்த எண்ணிக்கை உங்கள் ரேசக நேரம் .
இவற்றை செய்து பார்த்து நேரத்தை குறித்து வையுங்கள்.
இது உங்கள் இன்றைய மூச்சு திறன் . . .

வாசி யோகத்தின் 3 வது அங்கம் ஆசனம் .
---------------------------------------------
---------------------

அஷ்டாங்கயோகத்தின் 3 ஆம அங்கமும் பிற அங்கங்களும இயம நியம அன்பு உள்ளவர்கே கற்று தர வேண்டும் .. இவை இல்லாதவர்க்கு கற்றுதருவது பெரும் பிழை என்று திரு மூலர் சொல்கிறார் . 

பார்க்க
ஈவது யோகா இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கும் மவர்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும் பிழை என்று கொள்வீரே .
-திருமந்திரம் பாடல் 506

மாணவர் அனைவரும் தகுதி உள்ளவர்கள் எனவே ஆசனம் பற்றி திரு மூலர் சொல்வதை பார்ப்போம் .

பங்கயமாதி பரந்த பல் ஆதனம்
அங்குளவாம் இருநாலு அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவ னுமமே .
திரு மந்திரம் பாடல் 558

பங்கயம் என்ற பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன ,அவற்றுள் எட்டு ஆசனங்கள் சிறந்தவை . அதில் துன்பமில்லாத சுவத்திகம் என்ற சுக ஆசனத்தில் அமர்ந்து வாசி யோகம் செய்ய தலைவனாக(இறைவனாக) ஆகலாம்

. சம்மணம் கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்த்தால் போதும் .இது சுகா ஆசனம். அது இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தால் போதும்.

வாசி பிராணாயாமம் செய்யா ஆசனத்தில் அமரும் முன் சில முன் தயாரிப்புகள் செய்தல் நல்லது . அவை சூரிய யோகம் , சூரிய நமஸ்காரம் . கற்பம் உன்னால் ஆகியவை . . சூரிய யோகம் முன்பதிவில் பார்த்தோம் .

சூரிய யோகம் சித்தி பெற்றால் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது . சூரிய நமஸ்காரம் 12 ஆசனங்கள் . தொடர்ச்சி யாக செய்வது இது செய்தால் சூரிய யோகம் செய்த பலன் கிடைக்கும் . மேலும் பத்து நாடிகளும் சீராக செல்படும் . 

வாசி யோகம் செய்யும் பொது மூச்சு பிடிப்பு போன்ற இடையூறு ஏற்படாது . வாசி நிற்கும் ..

நம்மில் பலருக்கு சூரிய நமஸ்கார அருமை தெரிவதில்லை . காலை அல்லது மாலை சூரியனில, சூரியனை நோக்கி இந்த தொகுப்பு ஆசனங்களை வாசியோக பிரானா யாம செய்வதற்கு முன் செய்வது சிறந்தது இதை செய்யும் விதத்தை சொல்கிறேன். .

வாசியோக எட்டு அங்கங்களில்; இயம, நியம, ஆசன என்ற மூன்று பார்த்தோம் . வாசி நிற்பதற்கு முன்தயாரிப்பாக . மனதையும் உடலையும் சுத்தி செய்ய வேண்டும் . மனதை குவியசெய்யவும் பிரபஞ்ச உயிர்சக்தி பெறவும் திராடக , சூரிய யோகா, சந்திர யோகா மற்றும் சூரிய வணக்கம் ஆகியவை பார்த்தோம்..

பிராணயாமத்தில் பூராக, ரேசக கும்பகம் . பார்த்தோம் . அதில் அமரும் ஆசனம் பார்த்தோம் .
இனி உடலை சுததிசெயும் முறை பார்ப்போம்.. உடல் என்பது மூன்று தேகங்கள் கொண்டது .அவை

1. ஸ்துல என்ற பரு உடல் ::தலை ,கை., கால நெஞ்சு, நுரையீரல், இதயம், இரைப்பை குடல் ஈரல் போன்ற அங்கங்களால் ஆனது பரு உடல்

2. சூட்சமம் என்ற நுன் உடல் :: இரத்தம் , காற்று , வெப்பம் , மின்சக்தி, காந்தத சக்தி ,உயிர் சக்தி ஆகியவைகளின் நாடிகள் ஓட்டம்; , அங்கங்களளின் செல்கள் முதலியவை நுன் உடலில் அடங்கும்

3. காரண தேகம் என்ற விஷ்ட தேகம் ; ஸ்துல சூட்சமம் தேகம் பெற அடிப்படையானது . இன்றைய அறிவியல் இதை geneஜீன் உடல் என்கிறது
இந்த மூன்று உடலையும் சுத்தம் செய்து வாசியை நிறுத்த வேண்டும் .. அதற்கு உபாயம் கொங்கணர் சொல்கிறார் .

இரண்டாக இருந்ததப்பா . வாசி தாணு
மேர்த்துடனே ஒன்றாச்சு அதுவும் போச்சு
பந்தாக பழகிற்தற் கிதுவே மார்க்கம்
பார்க்கையிலே கற்ப்பமுண்டு பாரு பரு
-கொங்கணர் மூவாயிரம் முதல் காண்டம் பாடல் 201

வாசி என்ற மூச்சு காற்று இடது நாசி ஓட்டமாக இடைகலைஎன்றும்
வலதுபுற ஓட்டமாக பிங்கலை என்றும் இரண்டாக ஓடும் . அதை வலது நாசியில் உள்ளே இழுத்து நிறுத்தி இடது நாசியில் வெளி இட்டு. ஒன்றாக மாற்றப்பட்டது . பின்பு வாசி குண்டலியாகி வாலை ஆகியது. . இவ்விதமாக முறையாக வாசி யோகம் பழக வேண்டும் . 

இவ்விதம் வாசி யோகம் பழகும் போது கற்பம் உண்டு வாசியோகம் பழக வேண்டும் .

கொங்கணர் விதிப்படி வாசி யோகம் பழகுவதை விரிவாக பிராணயாமம் என்ற நான்காம் அங்கததில். பார்ப்போம். அதற்க்கு முன் கற்பம் உண்ணுதல் என்பதை பார்ப்போம் ,

கற்ப மருந்து அல்லது கல்ப மருந்து எது ?

மருந்துகள் ஐந்து வகை உண்டு . அவை

1. துயர் நீக்கி ( : )பரு உடலில் வரும் நோய் துயர் . இந்த நோயில் வேலை செய்து . உடல் துன்பத்தை போக்கும் . சிலவகை காய்ச்சல் , தலைவலி, இருமல் , சிறு கட்டிகள் போன்றவை களை நலமாக்கி துயர் நீக்கும் . ..

2, பிணி நீக்கி ( ) சூக்கும உடலில் வரும் நோய் . பிணி . இது செல்களை பாதிக்கும் . . இதன் வெளிப்பாடு பரு உடலில் தெரியும் . காச நோய் , , எயிட்ஸ் , பால்வினை நோய்கள் மஞ்சக் காமாளை முதலியவைகளை. குணப்படுத்தும் ..

3. கன்மம் நீக்கி ( ) இது காரண தேக பாதிப்பால் உருவாவது .. ஜீன் குறை பாட்டால் உருவாகும் . . புற்று நோய், நீர்இழிவு . வலிப்பு ,மரபு குறைபாடு ஆகியவை அடங்கும் , இதை கர்மவினை என்பர் . இவற்றை போக்குவது கன்ம நீக்கி முறை .

4.நோய்தடுப்பு மருந்து .( ) நோய் வராமல் தடுப்பது.

5. கற்பமருந்து அல்லது கல்பங்கள்: இம்மருந்துகள் துயார் , பிணி, கன்மம் ஆகியவற்றை போக்கும் . கற்ப மருந்துகள் 108 என்று இறுதி செய்துள்ளார்கள் சித்தர்கள் . எயிட்ஸ் பற்றியும் , புற்றுநோய் பற்றியும் அதை போக்கும் கல்ப மருந்துகள் பற்றியும் சொல்லி உள்ளார்கள் ..

இன்றைய ஆங்கில மருத்துவ முறை கல்ப மருந்துகள் என்னும் விஞ்ஞானம் பற்றி அறியவில்லை . . கண்ம நோய்களுக்கு தீர்வும காணவில்லை ..
வாசி யோகத்திற்கும் கல்பங்களுக்கும் உள்ள தொடர்பை பார்பபோம .

கலபங்கள் செல்களில் தங்கி யுள்ள விசங்களை போக்கி வெளி ஏற்றும் .. இந்த விசங்கள் கழிவுகலாய் வெளியேற்றபடும் . . முக்கியமாக சளி , மலம் மூத்திர மாக வெளியேற்றும் . இதனால் செல்கள் புதிப்பிக்கப்படும் செல் களுக்கு உள்ளேயும் செலகளுக்கு வெளியேயும் இடை வெளி உருவாகும் . இதனால் உறுப்புகளின் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும் . 
இதனால் நுரை ஈரல் . உதர விதானம் , மர்புக்ககூடு ஆகியவை அதிகமாய் விரிவடையும் . பிராணயாமம் செய்யும் பொது அல்லது சுவாசிக்கும் போது அதிக உயிர் சக்தி உடலுள் வரும் . உடல் வலுப்பெறும் . உடல் இளமை அடையும் .

சித்தர்களின் 108 கற்பன்களில் முதன்மையானவை மூன்று . இந்த்த மும்மூர்த்திகளே வாசியை நிர்க்கசெயும் கல்பங்கள் இவைகள் செல் கலீல் விசத்தை பொலி அவற்றை சளியாக , மலமாக மூத்திர மாக வெளி ஏற்றும். வாசி வலுபெற்று நிற்கும் . .

1. கரிசாலை என்ற கரிசலங்கண்ணி என்ற கரிப்பபான் என்ற வெள்ளை பூ பூக்கும் கரிசாலை . .

2. கற்றாழை என்ற சோற்று கற்றாழை .

3 . கடுக்காய் என்ற அமிர்த கடுக்காய்
இவை மூன்றும் நம்மில் பலருக்கு தெரியும் ., ஆனால் இவற்றை கல்ப மாகாக பயன் படுத்தும் தொழில்நுட்ட்பமே சித்தர்கள் அறிவியல் .

இன்றைய மருத்துவ அறிவியல் உடலை புதிப்பித்தல்rr( Theory of rejuvenation ) என்னும் கோட்பாட்டில் பெரும் பொருள் செலவு செய்கிறது. அதில் ஒருபகுதி செல்லகளில் உள்ள விஷத்தை போக்குதல் .( Removal of junk or toxin materials from the cells ). இதில் அவர்கள் வெற்றி பெறவில்லை . ஆனால் சித்தர்கள் செல்ல்களில் உள்ள விஷத்தை போக்க மூன்று கல்ப மருந்துகளை கொண்டு ஒரு செய்முறை (procedure ) வக்குத்துள்ளனர் .. அதன் பெயர் வழலை வாங்கல் ..

வழலைவாங்கள்
---------------------------

சென்ற பாடத்தில் கல்பம் பற்றி சொன்னேன் . அதில் முக்கியமான மூன்று கல்பங்கள், கரிசாலை , கத்தாழை . இவற்றின் தயாரிப்பு , பிரயோகம் செயல்படும் விதம் ஆகியவை பார்ப்போம்.
இம்முன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக பயன் படுத்தும் முறைக்கு வழலைவாங்கள் என்று பெயர் . . இந்த முறையால் உடலில் செல்களில் உள்ள விசம கோழையாக , மலமாக மூத்திரமாக வெளியேறும் . 

இதுவே வாசி யோகத்தில் உடல் சுத்தி . இது பற்றி கொங்கணர் சொல்வதை பார்ப்போம்.

சுகமாக காயத்தில் வழலை வாங்கப
பேனப்பா ஆவின் நெய் படிகாலுக்குள் .
பேரான கையான்சார் அரைப்படிதான்
நானப்பா மெழுகுபதம் தன்னிலேதான்
நறுநெய்வடி கலசத்துட் சொலலகேளே
-கொங்கணர் கற்ப்பம் 100 பாடல் 57

வெல்லுகிறேன் என்ற மிளகு தானே
மீறாமல் லாரை களஞ்சி பொடித்துக்கொண்டு
செல்லும் பூவழலை பணவேடையும் கூட்டி
சிறப்பாக வடிகலசம் தான்னில் போடு.
-பாடல் 58

நாட்டமுடன் சுகழினையிலே மனதை நாட்டி
நலமாக மேலவாசல் கண்டத்து ஊதி
மாட்டடா பெரு விரலை நெய்யில் தோய்த்து
வலஞ்சுத்தி உள்ளேற்று வாசி ஊதி
கலட்டடா கருவழலை வழலை வாங்கு
-பாடல் 59

தாங்கியபின் இகவேன்நீர் விட்டு விட்டு
சலக்கட்டை யுறிஞ்சி கொப்பளிப்பாய்
பாங்குடனே மண்டலந்தான் செய்யும்போது
படுபாவி கண்டநஞ்சு கொல்ல பார்க்கும்
ஓங்கியே கத்தலழன் சாருதன்னை
ஓகோகோ கருவிட்டு சொல்லகேளு
-பாடல் 60

கேளப்ப தர்சனையும் மத்திமையும் கூட்டி
கேடியான தத்துவங்கள் தளர போட்டு
வாளப்பா பாவை போல் இருந்து கொண்டு
வாகாக கண்டத்தை வசைத்து வாட்டு
நாளப்பா தினந்தோறும் மிது போல்செய்து
நலமாக பின்னங்கே வழழை வாங்கே
-பாடல் 60

பேனுநீ இந்நீரில் கடுக்காய் மையை
பிதற்றாமல் கரைத்துடனே உள்ளே கொள்ளு .
வேணிநீ கொண்டபின்பு பர்ப்பமெல்லாம்
விறேசிக்க லச்சியத்தில் மேவி யூது
-பாடல் 62

ஆட்டையிலே கண்ட நஞ்சு கூமுட்டை போல்
அப்பனே அகன்று ஆரோக்கியமாகும் .
-பாடல் 64

பாடல்களின் பொருள் மற்றும் வழலை வாங்கல் செய்முறை

கரிசாலை நெய் .
-------------------------

கரிசாலை என்ற வெள்ளை பூ பூக்கும் கரிப்பான் என்ற மூலிகை எங்கும் கிடைக்கும் . நகர் புறத்தில் கீரை விற்பவர்களே கொண்டுவந்தது தறுவார்கள் . அதை கழுவி தண்ணீர் காய்ந்ததபின் . மிச்சியில் போட்டு அரைத்து விழுதை எடுக்கவேண்டும் . அதை ஒரு துணி அல்லது வடிகட்டியில் வைத்து பிழிந்து சாறு எடுக்கவும் . கரிசாலை சாறு ஒருபக்குடன் அரைபங்கு நெய் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும் . சிறு தீயாக எரிக்கவும் . சிறிது நேரத்தில் தண்ணீர் சத்து வற்றி மெழுகு போல்வரும் . முருகவிடகூடது . . 5கிராம் மிளகை த்ஹோல் செய்து இந்த கரிசாலை நெய்யில் சேர்த்து கிண்டி இறக்கவும் . . கரிசாலை நெய் பயன் பாட்டுக்கு தயார் .

பயன்படுத்தும் முறை
-----------------------------------

கரிசால நெய்யை கட்டை விரல் வெள்ளை பகுதியில் ரேகைக்கு மேல் உள்ள பகுதி முழுவதும் தடவவும் . வாயை நன்றாக திறக்கவும் . கரிசாலை நெய் தடவிய கட்டை விரலை வாய்க்கு உள்ளே அன்னக்கிர்க்கு ( உள்நாக்கு ) மேல்பக்குதிக்கு கொண்டு செல்லவும் . .

கரிசாலை நெய்யை அண்ணாக்கின் மேல்பகுதியில் தடவவும் . அங்கு கட்டை விரலால் அழுத்தி இடவலமாக(கையை ) சுற்றவும் . ஒரு நிமிடம் சுற்றினால் போதும் . தலை , தொண்டை மார்பில் இருக்கும் விஷம் சளியாக கோழையாக கைவழியாக இறங்கும்.
இது வழ வாழபாக இருப்பதால் வழலை என்று பெயர் . இது சங்கிலிபோல் நஊலாகவும் வரும் . சிலருக்கு உள்ளே உள்ள சளி வெளிவரும் . . இப்படி வழலை வெளி வந்தபின் வாய கொப்பளிக்கவும் . வெது வெதுப்பான நீர் நல்லது . இது ஒரு சுற்று . இவ்விதம் நான்கு சுற்று வழலை வாங்கவும் . . இதை சிவா வாக்கியர் மூலாதாரத்தில் முளைக்கும் கோரையை தினம் நான்ங்குகட்டு அறுத்து எடுக்கவேண்டும்.. இதனால் கிழவன் பாலனாவான் என்று மறை பொருளாக சொல்கிறார் .. இந்த நெய்யை ஒரு ரூபாய் வட்டம் அளவு சாப்பிட்டு நீர் அருந்தவும்..

கத்தாழை கற்பம .
----------------------------

இவ்விதம் காரிசாலை கற்ப வழலை வாங்கும் போது வெளியான விஷம் மரணத்தை தரும் வல்லமை கொண்டது . அந்த விஷத்தை உடலில் தங்காமல் வெளிஎட்ற வேண்டும் . கத்தாழை கற்பம் விஷத்தை முறித்து மலமாகவும் மூத்திரமாகவும் வெளியேற்றும் . இது சித்தர் அறிவியல்.

செய்முறை .
சோற்று கத்தாழை மடலில் இரண்டு அங்குலம் தோல் சீவி கத்தாழன் சோற்றை எடுத்து அதில் ஒரு சிட்டிகை மிளகை சேர்க்கவும் நடுவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து கொள்ளவும் . அதன் வெள்ளை பகுதியில் கத்தாழை மிளகு கூழல் தடவவும் . வாயை நன்றாக திறக்கவும் . இந்த கத்தாழை கூழ்தேய்தத விரல்களை தொண்டைகுள் அடிபகுதிக்கு செழுத்தவும். கத்தாழங் கூழை தொண்டை அடிப்பகுதியில் தடவி விரல்களை (கையை )முன் பின்னாக அசைத்து நன்றாக தேய்க்கவும்
. மீதம் இருக்கும் கத்தாழை கூழை சாபிடவும் .

கடுக்காய் .. கற்பம்
-----------------------------

கத்தாழை முறித்த விசத்தையும் முறிக்காத விசத்தை யும் கடுக்காய் முறித்து விறேசகம் என்ற வகையில் மலம் , வாயு , குடல் சளி அனைத்தும கலங்கி வெளியேறும். . .

செய்முறை .
கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் . அதை போக்க கடுக்காயை பாலில் வேகவைத்து எடுத்து கொள்ளவும் . அதை வெயிலில் காயவைக்கவும் . விஷம் நீங்கிவிடும். இது சுத்தி செய்த கடுக்காய் . .இதை கொட்டையுடன் உடைத்து மிக்சியில் அரைத்து பொடிசெயயாவும் . . கடுக்காய் கற்பம் தயார் . .
கத்தாழை உண்டபின் முக்கால் ஸ்பூன் கடுக்காய தூளை ஒருடம்ளர் நீரில் கலந்தது குடிக்கவும்
இவ்விதம் நாற்பது நாள் செய்யவேண்டும் . , அப்பொழுது மலம் வயிற்றை கலக்கி வெளியேறும் . , ஆகையால் கழிப்பறை அருகில் இருக்கும் படி பார்த்து கொள்வது நல்லது . . விறேசகம் அதிகமானால் இளநீர் , நீர்த்த பால் நிறைய குடிக்கலாம் . பால் சோறு சாப்பிடல். நல்லது .

இந்த மூன்று கற்பத்தை முடித்தால் உடல் புத்துணர்வு பெரும் . வாசி நிற்கும் . . பல நோய்கள் நீங்கும் . . குறிப்பாக செல்கள் புதிப்பிக்கப்படும் . . ஆயுள் கூடும் . இளமை பெருகும் . இதுவே மூலத்தில் முளைத்து வரும் கோரையை அறுத்தல் 

வாசி யோகம்  பற்றிய ஒரு முழுமையான பார்வை .- {பாகம் -3}
**********

{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}


வாசி யோகத்தில் நான்காம் அங்கம் வாசிப்பிரானாயாமம். . இதை சொல்வதற்குமுன் நண்பர்கள் கேட்ட பல சந்தேகங்களை போக்கவேண்டும் .

1. வாசி யோகத்தை வெளிப்படையாக சொல்லலாமா . ?

2. குரு நேரடியாக சொல்லிக்கொடுக்காமல் வாசி யோகம் கற்க முடியுமா ?

3. வாசியோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியமா .?
இல்லற வாழ்வில் இணைந்து இருந்தாலும் வாசி யோகம் செய்ய முடியுமா ?.

4.வாசி யோகத்தை பாதியில் விட்டு விட்டால் துயர் வருமா ?

5. நீங்கள் எப்படி வாசி யோகம் கற்று கொண்டீர்கள் .?

1. வாசி யோகத்தை வெளிப்படையாக சொல்லலாமா . ?

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பெற்று நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊண்பற்றி நின்றஉணர்வுறு மந்திரம்
தான் பற்ற பற்ற தலைப்படும் .
-திருமூலர் திருமந்திரம் பாடல் 85

இந்த வான்வெளி ஆகிய பிரபஞ்சம முழுவதும் நிறைந்த இறைவனுடன் நான் சேர்ந்தால்பெற்ற
து எல்லை அற்றஇன்பம் . அதை வேதமாக திருமந்திரத்தில் சொல்லி உள்ளேன் . அதை கற்று கடைபிடிக்க கடைபிடிக்க உங்கள் உடலின் உணர்வு களில் அந்த இன்பம் தெரியும் .

திரு மந்திரத்தில் அஷ்டாங் யோகம் என்ற வாசி யோகமும் வாசி உருவாக்குவதும் இந்த வையக்கதில் உள்ள அனைவர்க்கும் சொல்லப்பட்டது .. 

எனவே நான் அனைவர்க்கும் வெளிப்படையாக சொல்வதில் தவறு இல்லை .>

காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 .
என்ற நூலில் பாடல் 996&997 இல் சொன்னது .

“உலகோர்க்காய் இன்நூலை உரைத்திட்டேனே
உரைத்திட்டேன் கருக்குருவை வெளியாய் சொன்னேன் “

.. சித்தி முத்தி யோக ஞான முறையும்சொன்னேன் ..........
............

நெறிக்கண் திறப்பதற்கு நெறியை சொன்னேன்
குறை நீக்கி நரை மாற்ற முறையும்சொன்னேன் .”

பொருள்
-------------

காகபுசுண்டர் தனது பெருநூல் காவியத்தில் வாசி யோகம் செய்வது , நெற்றிக்கண் திறப்பது உடல் நோய் நீக்குவது நரை உண்டாக்கும் முதுமை போக்குவது , அஷ்டமா சித்திகள் அடைவது ஞானம் பெறுவது முக்தி அடைவது ஆகியவற்றிற்கான வழிகளை வெளிப்படயாய் யை சொல்லி உள்ளார் . இவற்றை இவ் உலகில் உள்ள அனைவரும் அறிய சொல்லி உள்ளார் . . 

எனவே யோகத்தையும் ஞானத்தையும் வெளிப்படையாக சொல்லலாம்,
காகபுசுண்டர் எனக்கு கொடுத்த கட்டளை
நூல் உனக்கு தருவதை மறைவாய் வைப்பாய்
முறையான சிடருக்கு முழுதும் சொல்லு.
நான் உனக்கு சொல்லி கொடுத்த நூலை மறைத்து வை . வாசி யோக முறை முதலில் சொல் . வாசியோக முறை கற்று தெரிய முறையான மாணவர்க்கு , சிவயோகமும் நான் நூலில் கூறியது முழு வதும் சொல் .
எனவே நான் அடிப்படை வாசி யோகம் மட்டுமே வீட்டில் வாசி யோகா தொடரில் சொல்கிறேன் . இது நன்மை தவிர தீமை செய்யாது . .

2. குரு நேரடியாக சொல்லிக்கொடுக்காமல் வாசி யோகம் கற்க முடியுமா ?

இதற்கு ஆதிகுருவும் திரு மூலரும் பதஞ்சலியும் திருவள்ளுவரும் சொல்வதை பார்ப்போம் .

வாசி யோக மற்றும் சிவயோக சரித்திரம்
ஆதி சேஷனுக்கு சிவயோகம் கற்க ஆசை வந்தது அதை விஷ்ணுவிடம் சொன்னார் . . விஷ்ணு அதற்க்கு “ மனிதராய் சிவனிடம் சிவயோகம் கற்று மீண்டும் வைகுந்த்தம் வா “ என்று ஆசிர்வதித்தார் .. அதன் படி பதஞ்சலியாக அவதரித்தார் . அவரது உடல் இடுப்புக்கு கீழ் பாம்பு மேலே மனித உரு . அவர் ஆதி சிவனிடம் வந்து வேண்டினார் . 

அதன்படி சிவயோகமாமுனி , பதஞ்சலி, வியாக்கிய பாதர் , நந்திகள் நால்வர் மற்றும் திரு மூலர் ஆகிய 8 பேருக்கும் சிவயோகத்தை கற்றுக்கொடுத்தார் . இதை திருமூலர் திருமந்திரம் பாடலில் கூறியுள்ளார் .

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்ச்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரும் மாமே
-திரு மந்திரம் பாடல் 67

திருமூலரிடம் காளங்கி எப்படி சிவயோகம் கற்றார் என்பதை பாப்போம்.

பரியான பரிதலத்தில் பணிந்து நின்று
பார்க்கையிலே திரு மூலர் பாதம் கண்டு
கெதியான மோச்ச மென நிற்கும்போது
கேசரியால் மனோன்மனியாள் கவடை திறந்து
விதியான அமைத்தவிதி எழுத்துகூட்டி
வீடான நவக்கிரகவிவரம் சொல்லி
மதியான தவம் காட்டி ரவியுன்ச் சொல்லி
மார்க்கமுடன் வாசியுடன் வழி சொன்னாரே
-காலாங்கி நாதர் கற்பவிதி 82 பாடல் 2.

மனோன்மணி தாய் வாழும் வீடான சுழுமுனையில் துரிய தியானத்தில் இருந்தேன் . அப்பொழுது திரு மூலரின் பாதம் கண்டேன் . . எனக்கு நற்கதி கிடைக்க மோட்சம் என்ற முகக்திக்கு வழி கேட்டேன் . அகர உகர ஆகிய எழுத்துகளின் பொருளும் அவற்றை சேர்க்கும் முறையும் சொன்னார் . நவக்கிரக வீடு என்ற உடல் தத்துவம் 96யின் விவரம் சொன்னார் . 

வாசி யோகம் செய்யும் வழியும் ,மதியான தவம் என்ற சிவயோகமும் ரவி என்ற முப்பு மார்க்கமும் சொன்னார் .

இந்த பாடலில் அறிவது காலாங்கி துரிய தியானத்தில் திரு மூலரிடம் கற்றார். ஆனால் நேர்முகமாக கற்கவில்லை .

. பதஞ்சலி பாடம் சொல்லி கொடுத்ததை சொல்லியுள்ளார் . இது புராணசெய்தி .
பதஞ்சலி சிவயோகம் கற்ற பின் வைகுண்டம் செல்ல காலம் வந்தது . 

அப்பொழுது மனிதர்களுக்கு சிவா யோகம் கற்று கொடுக்கr விரும்பினார். பதஞ்ச்சலி.. அவர் ஆதிசேஷன் அவரது பார்வை அல்லது மூச்சு காற்று பட்டாலே சாதாரண மனிதர்கள் எரிந்து விடுவார்கள் . , 

எனவே தான்னை சுற்றி திரை அமைத்து அதனுள் இருந்து மாணவர்களை நேரில் பார்க்காமல் பாடம் சொல்லி தந்தார் . அவரின் சொற்களை கேட்டு மாணவர்கள் படித்தார்கள் ..

இது போன்றுதான் .நான் முக நூல் வழி சொல்கிறேன் . அதை படிக்கிறீர்கள்
திருவள்ளுவர் கற்பம் 300 பாடல் 176
கொள்ளுவதற்கு குருவேணும் என்றெண்ணி
யுள்ளங்கலங்க துரைக்க உலகிலுண்டோ
கள்ளமமல்ல கனிந்த குருவாகும் விந்நூல்
வள்ளுவன் மெய் யுரையாய் வையகத்தில் பாடிநேனே

பொருள்
-------------

கற்று கொள்வதற்கு .குரு வேண்டும் என்று உள்ளம் கலங்க வேண்டாம் . இந்நூல் போல் கள்ளம என்ற மறைப்பு இல்லாமல் சொல்லும் நூல் உலகில் இல்லை . என்னுடைய நூலே முதிர்ந்து பழுத்த குரு என்பதை உண்மையாக உலகிற்கு சொல்கிறேன் .

எனவே நீங்கள் குரு இல்லை என்று கவலை படவேண்டாம் நான் எழுதுவது குருவாக இருக்கும் . .

3. வாசியோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியமா .?

இல்லற வாழ்வில் இணைந்து இருந்தாலும் வாசி யோகம் செய்ய முடியுமா ?.

வாசி யோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியம இல்லை .

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலாதார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கினால் அசேதனம் மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
-திருமந்திரம் பாடல் 2033

கண்டு , கேட்டு , உண்டு , முகர்ந்தது , உற்று அறிய கூடிய அஞ்சு புலன்களையும் அடக்கு அடக்கு என்று அறிவு இல்லாதவர்கள் தான் சொல்வார்கள் . அவ்விதம் அடக்கிய கடவுள்கூட மேல் உலகில் இல்லை . அவ்விதம் அடக்குவது அறிவுடையது இல்லை (அசேதனம் ) என்று அறிந்தேன் . ஆகையால் அஞ்சும அடக்காமலே முக்திபெறும் அறிவு அறிந்தேன் எனவே முக்தி அடைய . பிரமச்சாரியம் அவசியம இல்லை..
ஆண் பெண் இணைப்பை கர்ப கிரியை மற்றும் பரியங்க யோகம் என்ற இரண்டு
அத்தியாயங்கலீல் திரு மூலர் திரு மந்த்திரத்தில் சொல்கிறார் .

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துறை நாடிப
பரிகின்ற பத்தrெனும் பாரஞ்செய் தானே
-திரு மூலர் திரு மந்திரம் பாடல் 452

மூலாதாரத்திற்கு சிறிது மேல், உள்ள ஆண் பெண் குறிகளும் கால்களும் இணைந்து, அங்கி அப்பு என்ற சுக்கிலம் சுரோணிதம் கருப்பையில் பெய்ய செய்யும் ஞானம் தந்தவன் இறைவன் ., இதனால் பெண்ணை பத்து மாதம் குழந்தையை கருவில் சுமக்க செய்து ,குழந்தை பிறக்கவைத்தவன் இறைவன் . ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததி உருவாக்குவது இறைவன் தந்த இயற்கை ஞானம்
கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டிருr பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வாநீர் உருட்டிட
தண்டோருகாலும தளராது அங்கமே
ஒத்த மனமும் உடலும் கொண்ட கணவனும் மனைவியும் இணைந்து காதல் செய்வது பரியங்க யோகம் . அப்பொழுது உடலிலுள்ள இருவரின் அக்கினி , சூரிய சந்திரமண்டலங்கள
ும் இணைந்து இருவர் உயிர்சக்தியும் பரவெளியில் ஒன்றும் . இவ்விதம வாநீர் என்ற சுக்கில சுரோணிதம் கலப்பதால் இருவர் உடலும் கெட்டு போகாது .

“விந்து விட்டால் நொந்து கெடும் “.. என்றவாகியத்தை மேற்கோள் காட்டி யோகம் செய்ய பிரமாச்சரியம் வேண்டும் என்பார்கள். அது தவறு . விந்து என்பது தலைக்கு மேல் 4 விரல்கடை உயரத்தில் இருக்கும் சஹாஸ்றாரம் அல்லது பிரம்மரந்தராம் என்ற தலம். வாசி யோகம் செய்யும் போது சுழிமுனை என்ற தலைக்கு உள் இருக்கும் இடத்துடம் வாசி யோகத்தை முடிக்க கூடாது . 

அதற்க்கு மேல் உள்ள சகஸ்ரார தளமும் ஏறி வாசி யோகம் செய்யவேண்டும் .
இந்த விந்து என்ற சஹாஸ்றாரம் தளம் வரை ஏறி வாசி யோகம் செய்யா விட்டால் யோகா பலம் கெடும் . இதுதான்“விந்து விட்டால் நொந்து கெடும்” என்பதன் பொருள் . இதை போகர் 1000 பாடல் 140 ௦ இல் “
:”தாயென்ற யகாரமாம் சதாசிவன்தான் னொன்று
சார்ந்து நின்ற விந்துவதின் மேலுமமாமே”
என்று சொல்லி உள்ளார்
இல்லறம் பற்றி திருவள்ளுவர்கற்பம் 300 பாடல்கள் சொல்வதை பார்ப்போம்.

வாயத்துதைய எந்தனுக்கு மாணவி தானும்
இல்லறமும் துறவறமும் எனக்கே சித்தி
பாடல் 180
எவர்தேற போறார்கள் என்று எண்ணாதே
மருளாமல் இருப்பவரே பெரியோராகும்
மாதருடன் வையகத்தில் வாழழாமே
பாடல் 212
இணை பிரியாமலே துணை மறவாதே நீ
பிணை வழி மாதர்கள் தனையும் அகற்றிடு
உடை கட்டியே மையல்கள் ஊட்டியே
உலகத்தையே சாம்பல் ஆக்கிடும்
பாடல் 214

எனக்கு வாய்த்த மனைவியால் இல்லறத்திலும் துறவரத்திலும் வெற்றி பெற்றேன் .
வாசி யோகாம செய்து கற்பம உண்டு யார் வெற்றி அடைவார்கள் என்று மிரண்டு போகாமல் இருப்பவர் பெரியவர் , அத்தகையோர் உலகத்தில் பெனண்னுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை வாழழாம்
உன் மனைவியை மறகாமல் அவளை விட்டு பிரியாமல் இணைந்து வாழ
பிணை வழி மாதர் என்ற விலை மாதர்களை நினைவில் இருந்து அகற்று. அவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து கவர்ச்சி காட்டி உலகை சாம்பல் ஆககுவார்கள்.

வசிச்டருக்கும் விசுவமித்திரருக்கும் அகத்தியருக்கும் மனைவி யுண்டு . இந்து கடவுள்களுக்கு மனைவி உண்டு . எனவே இல்லறத்தில் இருந்து வாசியோகம் செய்வதே சிறப்பு .

4.வாசி யோகத்தை பாதியில் விட்டு விட்டால் துயர் வருமா ?

வராது . எந்த அளவு சாதனை செய்தீர் களோ அதற்கு ஏற்ப சக்தியும் சித்தியும் கிடைக்கும் . பிற்காலத்தில் வாசி யோகம் தொடரலாம் . இதுவே விட்டகுறை தொட்ட குறை .

5. நீங்கள் எப்படி வாசி யோகம் கற்று கொண்டீர்கள் .?

 சித்தர் நூல்களை படித்து தட்டு தடுமாறி பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தேன் .. சில ஆண்டுகளில் பிராணாயாம நுணுக்கம் தெரிந்தது . . 5 ஆண்டுகளுக்கு பின் வாசி இருப்பது தெரிந்தாது அதன் பின் வாசியை பழகினேன் . . பலநேரங்களில் சித்தர்கள் கனவில் கற்பித்தார்கள் சிறிது முன்னேறி தியானம் வரை அஷ்டாங்க யோகம் கற்றேன் . துரிய தியானத்தில் மேல்நிலை வாசியோகம் கற்று கொடுத்தார்கள் . பின்பு அவர்களின் நூலில் கட்டளை கொடுத்தார்கள் காகபுசுண்டர் உங்களுடன் பேசுவதை சொல்கிறார் .

பாருமே மாலுடனே பிரமனோடு
பகர்தெயிவம் யாவையுமே திறந்து காட்டும்
வாரும்மே அவ்வாசல் வழி நீர்தானே
வந்தாக்கால பேசிடுவோம் வாரும் மென்போம
நீருமே அவ்வாசல் வராவிட்டாலே
நீர் ரென்னை தேடாதீர் சும்மா நீரே .
-காக புசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல்

வாசி யோகத்தில் ஆறு தளங்கள் வழி மேலே ஏறி சுழிமுனை திறக்கவேண்டும் . அங்கு துரிய தியானநிலை அடையவேண்டும் . அப்பொழுது காகபுசுன்டரும் பிற சித்தர்களும் உங்களுடன் பேசுவார்கள் . . வேறு வழியில் பேசமாட்டார்கள் . முயற்சிப்பது வீண் ..

பிராணாயாமம = பிராண + அயனம் .

 பிராணன் என்ற உயிர் சக்தியின் . பயனம .

பிராணாயாமம = பிராண +நியமம் . சுவாசம் செய்யும் நெறி . .

 நெறிபடுத்தப்பட்ட சுவாசம் தான் பிராணாயாமம . இது பல வித யோகா முறைகளில் பலவிதமாக செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் ஹடயோக முறை பலரால் கடைபிடிக்கப்படுகிறது . ஹடயோக பிரானயாமங்கள் பத்துவகை படும் . 

அவைகள் , சூரிய அனுலோம (பீடம்), சந்திர அணு லோம , உஜ்ஜயி, சீதகாரி ,சீததாலி, பசஸ்திரிக்கா , கபாலபதி , பிரமாரி, மூர்ச்ச, பிளவினி ,
ஹட யோகத்தில் தவுத்தி நெட்டி ,பஸ்தி ஆகிய கிரியைகள் பயன் படுத்த படுகின்றன . 

இவ்விதம் செய்யப்படும் ஹட யோகத்தால் ஞானம் பெற முடியாது . மேலும் பல் உடல் துன்பங்கள் ஏற்படும். எனவே இந்த ஹடயோக முறைகளை தள்ள வேண்டும் என்று அகத்தியர் வாத சௌமியம்
பாடல் 927 இல் சொல்லி உள்ளார் .

பாரப்பா தன்மயத்தைஅறியாமல் தான்
பக்க்தியுடன் அடயோகம் செய்வான் பாவி
வீரப்ப மூச்சடக்கி செவி வாய மூடி
வேகமுடன் பூரிக்கில் மேனிதன்னில்
சாரப்ப மூலமதில் சொருகிக்கொண்டு
தலைவலிதது காதடைத்து முகமும் கோணி
நேரப்பா கண் தெறித்து மதிகலங்கும்
நேர்மை கேட்ட ஹட யோகம் தள்ளு தள்ளே
-பாடல் 927

அன்டா இதனாலே ஒன்றும் இல்லை
ஆதி என்ற மௌனாதி யோகம் பாரே
-பாடல் 928

சாதித்து வரும்போது மைந்தா மைந்தா
தருகின்ற பீடை எல்லாம் தானேபோகும்
பேதித்த தேகமது பிலமாய் நிற்கும்
பிலமான வாசி சிவயோகம் தங்கும் .
-பாடல் 822

பொருள்
--------------

ஹட யோகத்தின் தன்மையை அறியாமல் அப்பாவிகள பக்க்தியுடன் . ஹட யோகம செய்கிறார்கள் . அதன் தன்மை சொல்கிறேன் . வேகமாக மூச்சை உள்ளே இழுத்து செய்யும் ஹடயோக பிராணாயாமத்தால் ( !6; 64;32 , மற்றும் மேலே சொன்ன பிராணயாம முறைகள் ) தலைவலி , காதடைப்பு முகம் கோணி கண் பிதுங்கி மனம் கலங்கும் . (இவை அனைத்தும இரத்த அழுத்த நோய் குறி .. . இவ்விதம் இரத்த அழுத்த நோய் அடைந்தவரை நான் பார்த்து உள்ளேன் .) 

எனவே நேர்மை இல்லாத ஹடயோக முறை வேண்டாம் என தாள்ளிவிடு இதனால் ஒருபயனும் இல்லை . எனவே மௌனயோகத்தின் அடிப்படையான வாசி யோகம் செய் . வாசி யோகம் செய்து வரும்போது நம்மை பிடித்த வறுமை, துயரம் ,தோல்வி ,பயம் , துக்கம் , துன்பம் ஆகிய பீடைகள் தானே விலகிப்போகும். 

நோயுற்ற உடல் ஆரோக்கியமாக மாறி பலம் பெரும் . இந்த வாசி யோகா பலத்தால் சிவயோகம் சித்தியாகும் .

ஹட யோகம் பற்றி ராம கிருஷ்ணkrishna பரமஹம்சர் கருத்தை பார்ப்போம். ஒரு ஹடயோகி ராம கிருஷ்ணரிடம் “நான் கங்கை நதி நீர்மீது நடந்து நதியை கடந்தேன் “ என்றார்
ராம கிருஷ்ணkrishnaர் “ நான்கணா(25 பைசா ) சம்பாதித்தாய் “ என்றார் . நான்கணா கொடுத்தால் படகோட்டி கங்கையை கடந்தது விட்டு விடுவார் . 

ஹடயோக முறைகள் வித்தை காட்ட பயன் படும் ஞானம் அடைய பயன்படாது என்றார் .

வாசி யோகா பிராணாயாமம்
வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கபடும் கற்று பிராணன் . நெறி படுத்திய சுவாசம் பிராணாயாமம காலக்கணக்கோடு நெறிபடுத்திய சுவாசம் வாசி . 

முறைப்படி ஆதார தலங்களில் மூச்சை நிறுததி வாசி உருவாக்குவது வாசியோக பிராணாயாமம். .

வாசி யோகா பிராணாயாமம ஐந்து நிலை கொண்டது அவைகள்

1. பூரகம் = மூச்சு காற்றை உள்ளே இழுப்பது .

2.கும்பகம் = மூச்சு காற்றை உள்ளே நிறுத்தல்

3.ரேசகம் = மூச்சு காற்றை வெளிவிட்டால்

4. உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம்

5.ஆதார தலங்களில் நிறுத்தி வாசி உருவாக்கல் .
இவற்றை விரிவாக பார்ப்போம் .

 திருமூலரின் கொள்கைகள் பார்ப்போம் .

-உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார் .
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
திரு மந்திரம் பாடல் 724

புறப்பட்டு புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டு போகாண புரிசடயோனே
-திருமந்திரம் பாடல் 575

பொருள்
--------------

உடல் அழிந்தால் உயிர்பிரிந்து விடும் உயிரையும் உடலையும் இணைத்து வைக்கும் சக்தி யானது புரிசடையோன் என்ற சிவன் என்ற உயிர் உடல் இணைப்பு சக்தி . உயிர் என்பது ஒருவகை சக்தி உடல் சிதைவு அடைந்தால் . உயிர்சக்தி உடலை விட்டு பிரியும் . Dr. J. cRIAGCriag venter அவரது குழுவினருடன் ஒரு பாக்டிரியாவின் செயர்கை உடலை Dna matrum Rna moolam செய்து அதி உயிர் உள்ள பாக்டிரியாவை இணைத்தார் . உயிர் உள்ள பாக்க்டிரியவின் உயிர் செயற்கை உடலுக்கு வந்து விட்டது ஆனால் உயர் உள்ள பாக்டிரியா இறந்தது . எனவே உயிர் சக்தி உடலில் இருந்து பிரிந்து வேறு உடலுக்கு சென்றது . . எனவே உடல் சிதைவு ஏற்பட்டால் உயிர் பிரியும் .
உடம்பை வளர்த்தல் என்பது உடலை கொழு கொழுவென வார்ப்பது இல்லை
40 வயதை தாண்டினால் உடல் செல்கள், உற்பத்தி ஆவதைவிட சிதையும் செல்கள் அதிகரிக்கும் . இது வளர் சீதை மற்றம் வயது ஆக ஆக சிதைவு அதிகரித்து உடலஅழியும் .. செல்கள் சிதயாமல் மற்றும் செல் உற்பாத்தி அதிகமானால் உடல் இளமையாகும் . மரணம் ஏற்படாது . இதுவே உடலை வளர்த்தல்.
இவ்விதம் உடலை வளர்க்கும் உபாயம் என்ற தொழில் நுட்பம் அறிந்தேன் . அதனால் உடம்பை வளரத்து எனது உயிர் சக்தியும் வளர்த்து இறவா நிலை பெற்றேன்
உடம்பை வளர்க்கும் உபாயம் எது .? . . .

சுவாச காற்று அதன் விருப்பம் போல் இயங்கி உடலை வளர் சீதை மாற்றத்திற்கு உட்படுத்தி சிதைவை அதிகரிக்கிறது . அதனால் உடல் அழிகிறது... இதை தடுக்க இந்த சுவாச காற்றை நெறிப்படுத்தி உடலுள் இருக்கும் மாசுகளை அகற்றி தூய்மை படுத்த வேண்டும் . அவவிதம் செய்தால் உடல் உறுப்புகள் சிவந்து இளமை ஆகும் . நரைத்த முடியும் கருக்கும் . உயிர் உடலைவிட்டு நீங்காது .

பிராணாயாமத்தில் அடிப்படை மந்திரம் ஓம் . இதை வாசி யோகத்தில் எப்படி உச்சரிப்பது என்பதை சொல்கிறேன்

ஓம் = அ+உ+ம

இடது நாசி சுவாசம் 16 கலை ஆற்றல்.=ம ( நேர்மறை )

வலது நாசி சுவாசம் 12 கலை ஆற்றல் = அ ( எதிர்மறை)
வாசி உருவாக்கு தாரைகலை அல்லது அக்கிணிகலை 4 கலை ஆற்றல் =உ (எதிர் மறை)

அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . 

இது உயிர்சக்தி சமம் நிலை . இதுதான் .
எனவே ஓம் உச்சரிக்க காலநிர்ணயம்

அ = 12/ 2 =6 நொடி
உ =4 /2=2 நொடி
ம 16/2= 8 நொடி

உங்கள் இடது கையை முதுகு தண்டு அடியில் வையுங்கள் அ........6 நொடி .. தொடர்ந்து சொல்லிப்பாருங்க உங்கள் கைகளில் முதுகுதண்டு அடியில் அதிர்வு தெரியும் . உ என்பது 2 நொடி சொல்லுங்கள் தொண்டை யில் உணர்வீர்கள் . ம ...... 8 நொடி சொல்லுங்கள் தலையுள் அதிர்வை உணர்வீர்கள் .

இப்படி அ.......உ.ம ........= ஓம் என்று உச்சரித்து பாருங்கள் இந்த அதிர்வு அலை மூலாதார தளத்தில் இருந்து சுழிமுனை தளம் வரை பரவி ஆறு சக்கரங்களையும் ஊக்கபடுத்தி சக்தி சமநிலை உருவாக்கும் . உயிர் சக்தி பெருகும் .

இதுவே வாசி யோகத்திற்கு அடிப்படை மந்திரம் . 

மூலாதாரத்தின் பீஜ மந்திரம் . இதை சொல்லி பழக வேண்டுகிறேன் .
கவலை பதட்டம் , மன அழுத்தம் , கோபம் ஆகிய நிலையில் மற்றும் செயல் வெற்றிபெற செயல் செய்வதற்கு முன் 27 முறை சொல்லுங்கள் .. இதன் மகிமை உணர்வீர்கள் .

சந்தேகம் விளக்கம் .
-----------------------------------

அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . 

இது உயிர்சக்தி சமம் நிலை விளக்கவும் .
நாம் நலமுடன் இயங்க பிரபஞ்சத்தில் இருந்து சக்தியை மூச்சு காற்று வழியாக பெறுகிறோம் . 

மற்றும் நம் உடலிலும் சக்தியை உற்பத்தி செய்கிறோம் . இந்த சக்தி தேவை மொத்தம் . 96 கலை அலகு... கலை என்பதது சித்தர்கள் சக்தியை அளவிட பயன் படும் அளகு .

பிரபஞ்சத்தில் இருந்து பெறுவது 32 கலை Unitஅளவு சக்தி . இந்தசக்தியை பயன் படுத்தி உடல் 64 கலைகள் சக்தியை உற்பத்தி செய்கிறது .. அதாவது ஒரு பிரபஞ்சu கலை இரண்டு உடல் கலை உருவாக்கும் .

நமது இடது நாசி திறன் அல்லது சந்திர கலை அல்லது இடகலை.16 கலை சக்தி . வளது நாசி திறன் அல்லது பிங்ககலை 12. கலை சக்தி ஆக மொத்தம் 28 கலைகள் . பிரபஞ்ச சக்தியை பெற 4 கலை குறைபாடு உள்ளது மேலும் இதனால் உடலில் உற்பத்தி செய்யும் சக்தி 8கலை குறையும் ஆக மொத்தம் 12கலை சக்தி குறைபாடு எல்லோருக்கும் ஏற்படுகிறது
இந்த சக்தி குறைபாடு செல்களின் இயக்கத்தை பாதித்து கழிவுகளை அகற்ற முடிவது இல்லை . புதிய செல்களை வேனடிய அளவு.. உற்பத்தி செய்ய முடிவது இல்லை
இதனால் உடல் நலிவடைந்து மரணம் ஏற்படுகிறது .

இதை தவிர்க்கும் தொழில் நுட்பம் வாசியோகம்
. . சநரகலை என்ற இடகலையும்யும் சூரியகலை என்ற பிங்கலைம் சமநிலை இல்லை . இரண்டின் வித்தியாசம் 4 கலைகள். இதனால் நோய் மூப்பு சாக்காடு என் ஏற்படுகிறது . வாசி யோகம் மூலம் தாரை கலை அல்லது தாராகலை உருவாகினால் அது 4 கலை கொண்டது ஆகும் . அதன் தன்மை சூரியனை போன்றது. எனவே சூரியகலை ! 2 உடன் தார கலை நான்கு சேர்ந்தால் 16கலை ஆகும் . இது சந்திரகலை16க்கு சமம் ஆகும் . இது தான்

சூரியகலை(1 2 ) + தார கலை(4) = சந்திரகலை16

சூரியகலை= அ , தார கலை= உ , சந்திரகலை=ம
அ=உ =ம
12+4=16

இது சக்தி சமநிலை . இதனால் பிரபஞ்ச சக்தி 32 களையும் முழுமையாக பயன் படுத்தி உடல் 64 கலை சக்தி உற்பத்தி செய்யும் . உடல் அழியாது .

இதுவே வாசியோகம் உடலையும் உயிரையும் வளர்க்கும் விதம் . 

இக்கருத்தை திமூலர் திரு மந்திரம் பாடல் 855மற்றும்856 ஆகியவற்றில் சொல்லி உள்ளார் .

-எட்டெட் டனலிண் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்கு சூல்கலை
கட்டப்பட்டுமீ ரெட் டா மதிகலை
ஓட்டப்படா இவை ஒன்றோடொன் றாகவே
பாடல் 855

-எட்டெட்டும் ஈறாறும ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலை என்ப
கட்டப்படுந தார கைகலை கதிர்நாலுள
கட்டிட்ட தொன்னுரற்றோ டர்றுங் கலாதியே
பாடல் 856

Sir, I read 10th lesson and tried tried chanting A + U + M, was able to feel vibration on head and throat, but was not able to feel on tip of spine.

உங்கள் பிறங்கை இடுப்பு முதுகு தண்டில் வையுங்கள் . நுனி நாவை நீட்டி மேல் அன்னத்தை தொடாமல் சிறிது வளைத்து கொள்ளுங்கள் . வாயை சிறிது திறந்து அ.......... என்று ஓசை தொடர்ந்து எழுப்புங்கள் . உங்கள் அ ஓசையென் அதிர்வு அலை உங்கள் பிறங் கையில் உணர்வீற்கை . . இதை பயிற்சி செய்து பார்க்கவும் 
வாசி யோகம்  பற்றிய ஒரு
முழுமையான பார்வை .- {பாகம் -6}
**********
**********
**********
**********
**********
**********
**********
************

{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}

thanks for Raja Krishna Moorthy sir....

சென்றபதிவில் சுவாதிஷ்டாணம் தளத்தையும் சக்ரத்தையும் பார்த்தோம் .

 இந்தபதிவில் மணிபூரகம் தளத்தை படிப்போம்.

மணிபூரக சக்கரம் .
--------------------------

மாலினுட வீடதுதான் நறுவிரல்லின் மேலே
மாசற்ற பிறைபோலே கோட்டையாகும்
மாலினுட வளையம்போல் பத்திதழதான்
பத்தமு னச்சரத்தின் பயனைகேளு
தாலினுட ஜனகமா முனியின்தாகந்
தயங்காத நரபர்ப்பர் தண்மையாகும்
ஆலினுட மங்நடுவில் பூதம் அப்பு .

அதன் பீசம் வங்கென்று அறியலாமே
-போகர் வைத்திய காவியம் 1000 பாடல ௪3

அறிந்த மணிபூரகத்தின் வீடுமாகும்
அப்பனே துரியமது யிருப்பிடந்தான்
பிறிந்தேசர் வேதமுமாம் படிகவர்ணம்
பிரியாம லச்சரந்தான் வாமபாகம்
கறித்தஅறு சுவையுமங்கே காணலாகும்
கதித்த மச்சையோடு உதரமூளை
வெறித்ததோர் விந்துவோடு அஞ்சுமாகும்
மிக்கசங்கு சக்கரமும் கருடவாகணமே
-போகர் வைத்திய காவியம் 1000 பாடல ௪௪

கார்க்கஉரு செபித்தநாடு புருவமததில்
கண்ணுமன கண்ணாலே நன்றாய் பார்த்தல்
மார்கமுடன் லட்ச்சுமியும் விஷ்ணுதேவர்
மகத்தான பூரணசந்திரன் போல் மைந்தா
ஏற்கையுடன் இருதயத்தில் காணும்பாறு
இண்பமுள்ள தரிசனத்தை கண்டாயானால்
தீர்கமுளல சிவயோக வாழ்வு பெற்று
செல்வபதியாய் இருப்பாய் தினமும் நோக்கே
-அகத்தியர் வாத சௌமியம பாடல் 61

பொருள்
மணிபூரகம் அமைவிடம்
சுவாதிஷ்டாணம் தலத்தில் இருந்து ஆறு விரற்கடை உயரத்தில் மணிபூராக தலம் உள்ளது

மணிபூரக சக்கர அமைப்பு .
நடுவில் சதுரம் . அதை சுற்றி சகரம் என்ற வட்டம் சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை வட்டத்தை சுற்றி பத்து தாமரை இதழ்கள்.

பஞ்சவித்து :மகாரம் .

பஞ்ச பூதம் : நீர் என்ற அப்பு

நிறம் : ஸ்படிகம் அல்லது பளிங்கு வெண்மை

அவத்தை :துரியம
உடலில் செல்படும் இடம் ..,சதை, இரத்தம்,மச்சை, மூளை விந்து ஆகிய ஐந்து இடங்கள் . அறு சுவை அறியும் தன்மை .

வேதம்: யஜூர் வேதமாகும்

அதி தேவதைகள் : திருமாலும் லக்ஷ்மியும் ஆவார்கள் கருடனும் சக்கரத்தழ்வரும் . திருமாலுடன் இருப்பார்கள்.

பீஜ மந்திரம் :
இந்த தலத்தின் பூத மந்திரம் வங்
இந்தத்தல விஷ்ணு மந்திரங்கள் : அரிநமோ நாராயண : ஓம் நமோநாராயநாயா
.
இந்த தலத்தின் 
லக்ஷ்மி மந்திரம் : ஸ்ரீயும்

சிவ மந்திரம் ; ம உச்சரிப்பு மங் அல்லது மம்
எந்த மந்திரம் சொன்னாலும் நன்று . ஆயினும் வாசி யோகா பிராணாயாமத்தில் ஸ்ரீயும் அல்லது மங் அல்ல மம ஆகிய அசசரங்கள் சொல்லி வாசி உருவாக்கல் சிறப்பு . இவ்விதம் தினமும் வாசி யோகம் செய் .

இந்த தலத்தின் தொழில்: காத்தல்
மணிபூரகம் தளத்தில் மனதை நிறுத்தி , ஸ்ரீயும் அல்லது மங் அல்ல மம என்ற அசிரத்தை செபித்து வாசி உருவாகவேண்டும் . 

தினமும் வாசி யோகம் செய் அங்கு மணக்கண்ணால் மணிபூரகத்தை பார்த்தால் அங்கு திருமாலும் லக்ஷ்மியும் தோன்றி அருள் செய்வார்கள் . 

வெள்ளைநிற பூரண சந்திரன் போல் ஒளி தெரியும் . அனைத்து செல்வங்கள் பெற்று செல்வபதியாய் இன்பமான வாழ்கை பெறுவார்கள் சிவ யோக வாழ்வும் கிடைக்கும் அதாவது உடலும் உயிரும் காக்கப்படும் .நீண்ட ஆயுள் பெறுவார்கள் . .. இதற்கான வேண்டுதல் இங்கு செய்யலாம் ...

அனாகத சக்கரம் .
--------------------------

அறிவுக்கு மேலேறி எட்டங்குலத்துக்
கப்பால் நாகதத்தின் வீட்டை கேளு
முறிவுக்கு முக்கோனமாகி நிற்கு
முதிர்வளயம் பனிரண்டு இதழுமாகும்
பிறிவுக்கு காகா கா காங ச சா
பேரான ச ச ஞாடா டாவாகுமே
இறிவுக்கு இதழில் நிறகு மட்சரந்தான்
ஏற்றுமாச்ஞ் சுழுத்தியதுக் கிருப்புமாகும் .
-போகர் வயித்திய காவியம்1000 பாடல் 49

ஆமென்ற சிகாரத்தின் நெழுத்து நடுவாகும்
ஆண்மையாம் பூதமதுதேயு தானாம்
தேனென்ற செம்மைநிற சிவப்புமாகும்
தேயுவுட பீசமது நவ்வுமாகும்
ஒம் மென்ற ஒளிகோடி பானுவாகும்
ருத்ரணும் ருத்ரியும் நடுவே நிற்பார்
கோமென்ற அவருடைய குணமே தென்றால்
கொடும் பொசிப்பு, சோம்பலோடு பயமும்தூங்கே
-போகர் வயித்திய காவியம்1000 பாடல் 50

தூங்கவே எழுப்பி மெல்ல பெண்ணை சேர்க்கும்
சுகமஞ்சும் சிவன்கைக்குள் தொழில் தானப்பா .
தாமென்று தியானித்து வாசியை நீவைத்து
தம்பித்து ஓம் ஆம் அ உ ம சிவாயநமா வென்று .
-போகர் வயித்திய காவியம்1000 பாடல் 50

ஒருசாமவேதத்தின் உறுப்புமாகும்
-போகர் வயித்திய காவியம்1000 பாடல் 51

மாலை கடந்து மகத்தான ருத்திரன்
காலையுறத் தாக்கிக் கலங்காதே நோக்கிட்டு
சாலச் சிகாரத்தை தனக்குள் ரேசிக்க
மேலை சிவப்போடு யவே விரிவெட்டு சித்தியே
-திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 346

பொருள்
அறிவால் உள்நோக்கி பார்த்தால் திரு மாலின் தலமாகிய மணி பூரகத்திற்கு மேல் எட்டு விரற்கடை மேல் உள்ள தலம் அனாகதம். இதன் சக்கர தன்மை பார்ப்போம். நிறம் அடர் சிவப்பு . இதன் அமைப்பு . நடுவே முக்கோணம் அதை சுற்றி வட்டம் வட்டத்தை சுற்றி 12 தாமரை இதழ்கள்.

இந்த தலத்தின் உணர்வுநிலை என்ற அவத்தை சுழுத்தி ஆகும் . தலத்தின் அதி தேவதைகள் ருத்ரனும் ருத்திரியும் ஆவார்கள்.

 இவர்களின் தொழில் அழித்தல ஆகும்
பஞ்சவித்துவில் மகாரமாகும் . . பஞ்ச பூதங்களில் அக்கினி இதன் பூதமாகும் இதன் ஆற்றல் தன்மை 2 4 கலைகளாகும் . இங்கு ஒருநாளில் 3000 சுவாசம் நடை பெரும் . இத்தளம் உடலில் ஜடாக்கினி என்ற அமிலத்தை சுரக்கசெய்து கடும் பசியை உண்டாக்கும் .. பயம் , தூக்கம் ,சோம்பல் உருவாகும் . தூங்கியபின் பெண்ணை சேர உணர்வுகளை உருவாககும் . 

ஐம்புலன் இயக்கமாகிய கண்டு, கேட்டு , உண்டு , உயிர்த்து உற்று அறியும தன்மை இத்தளத்தை சார்ந்தது நாளமில்லா சுரப்பிகளில் தயமுஸ் என்ற நோய் எதிர்ப்பு சுரபி செயல் படும் . .. 

வேதங்களில் சாமவேதமாகும், .
மந்த்திரங்களில் பீஜமந்திரம் ந ம சி வ ய என்பதின் நடுவண் “சி “ ஆகும்
பஞ்சபூதத மந்திரம் “ரம்” .
பண்ணிரண்டு இதழ்களின் அச்சரம்
காகா கா காங ச சாச ச ஞாடா டா வாகும. இதழ் களின் மந்திரம் சில சித்தர்கள் மாறுபட்டு சொல்கிறார்கள் . .

புரியட்டம் என்ற எட்டு சூக்கும தளங்களில் உடலில் உள்ள மூன்று தளங்களில் முதல் தளமாகும். 

இத்தளத்தில் மனதை நிறுத்தி வாசி யோகம் செய் . இங்கு நோய்களை அழிக்கவும் , கெட்ட குணங்களை எணணங்களை அழிக்க வேண்டுதல் சிறப்பு ..

விசுக்தி சக்கரம்.
---------------------------

எறியே பன்னிரண்ட.டங்குல மேதாண்டி
யேறமாம் விசுக்க்தி என்ற தலமதாகும்
மாறவே யறுகோண வளையமொன்று
மகத்துவமாம் பதினாறு இதழு மாகும்
ஆறவே இதழுக்கு லச்சரந்தான்
அ-ஆ-இ-ஈ உ-ஊ
வகாரமது வேறோ இல்லோ இல்லோ
துணையான எ-ஏ-ஐ- oஒஓ ஒள அம ஆம்
-போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 56

அம்முதல் பதினாறு எழுத்துமிட்டு
அறுகோண நடுவேதான் வகாரம் நிற்கும்
வாமுதலாய் மயேஸ்பரனும மயேஸ்பரியும் நிறபார்
மகத்தான சொர்பனத்துக் கிருப்புமாகும்
பூ முதலாய் பூதமது வாயுவாகும்
புகழான பீசமது அங்கு மாகும்
நாமுதலா யதர்வண வேதந் தானாகும்
நல்ல மனமே வாகனமாய் நாடலாமே
-போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 57

நாட்டமா யிவருடைய தொழிலினன் றாய்
நடத்தலோடு ஓட்டல் மயங்கி கிடத்தல்
நீட்டமாய் நிருத்தளோடு கலங்க்கா திருத்தல்
நிலை யஞ்சின் விபரத்தை நிலைக்க கேளு
பூட்டமாய் பொசித்தளோடு ராகங்க்கேட்டல்
பொங்கியே கோபஞ்சன்டை சுமயைதாங்கள்
ஓட்டமா யோங்க்காரம் உன்னை கண்டால்
உயர்வாயை திறந்திடுதல் உண்மை கானே .
-போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 5௮

குரமையாய் நாதமது கண்டத்திற் காணும்
குறிப்பன திரேதகையின் கூறறு தானே .
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 61

மார்க்கமாய் மந்திரத்தை யுண்ணி யுண்ணி
வாசியை நீ மறவாமல் மருவி பூட்டி
ஆர்க்கமாய் அங்கென்று கும்பித்து நிற்கில்
ஆத்தாளும் உமையாரும் அகம் மகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின் வழியுஞ் சொல்லி
வரிசையோடு அதற்க்கு வழியும் சொல்வார் .
-போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 63

உள்ளும் மகேசன் உருக்கும் பரத்தடி
தெள்ளியே நோக்க சிறுபிள்ளை தானாவான்
அல்லும் கனிபோலேஆகும் சிவயோகம்
துல்லியவாசி துடியாது சித்தியே .
-திரு மூலர் கருக்கிடை வைத்தியம் .பாடல் 34௮

பொருள்
அநாகத தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை ஏறினால் இருக்கும் இடம் விசுக்தி .
. விசுக்தி சக்கர வடிவ அமைப்பு .
விசுக்தி தளம் அறுகோண வடிவானது . அதை சுற்றி வட்டம் உள்ளது . அந்த வட்டத்தை சுற்றி பதினாறு தாமரை இதழ்கள் உள்ளன .,

விசுக்தியின் நிறம் கருமை .
விசுக்தியின் பஞ்சவித்து நாதம் .
விசுக்தியின் உயிர் சக்தி 10 கலை .
விசுக்தியின் பூதம வாயு
விசுக்தியின் அதி தேவதைகள் மகேஸ்வரன் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் சக்கரத்தின் நடுவே நிற்பார்கள் .

விசுக்தியின் அதி தேவதைகள் தொழில் திரதேயி என்ற மாயை . மற்றும் மறைத்தல் .
விசுக்தியின் அவத்தை என்ற உணர்வுநிலை சொப்பனம்
விசுக்தியின் செயல் நிற்றல் , நடத்தல் , ஓடல் மாயங்கல் கலங்காது இருத்தல் ஆகி ஐந்து . உணவின் சுவை அறிதல் , இசை ரசித்தல் , கோபம் கொள்ளுதல் , சண்டைஇடல் மனசுமைகளை தாங்குதல் ஆகிய செயல்களும் நடைபெற காரணமாகும்
விசுக்தியின் பீஜ மந்திரம்
சிவமந்திரமான ந ம சி வ ய வில் “ வ “விசுக்தி சக்கரத்தின் நடுவே இருக்கும் வங் என்று ஊச்சரிக்கலாம் .

இதன் பஞ்ச பூத பீஜமந்திரம் ...” யம்”
இதன் பதினாறு இதழ்களின் அச்சரம்
அ – ஆ- இ- ஈ – உ-ஊ- எ-ஏ- ஐ-o ஒ-ஓ ஒள –அ- ம- ஆ- ம
விசுக்தி தளத்தில் மனதை நிறுத்தி மறவாமல் மந்திரம் ஓது .வாசியோகம் செய் . அப்பொழுது பத்தாம் வாசலுக்கான வழி சுழிமுனை செல்ல திறக்கும் . 

இந்த தலத்தில் இருக்கும் உமையார் என்ற மகேஸ்வரன் ஆத்தாள் என்ற . மகேஸ்வரி மனம் மகிழ்ந்து வேதிகள் செய்வதற்கான மார்கத்தையும் , படிப்படியாக செய்யும் முறைகளும் சொல்லி தருவார்கள் . 

விசுக்தியில்நின்று வாசி யோகம் செய்தால் பத்தாம் வாசல் திறந்து வாசியோகம் சித்தி ஆகும் விசுக்தியில் நின்று சிவயோகம் செய்தால் முதுமை மறைந்து இளமை அடைவார்கள் . 

இதனால் சிவயோகம் சித்தி ஆகும் . இந்ததளத்தில் வாசி யோகம் செய்து வேதை சித்தி செய்ய வேண்டல் சிறப்பு . குழப்பமான நிலையில் உண்மை தன்மை அறிய வேண்டுதல் சிறப்பு . மறைப்பையும் மாயையும் நீக்க வேண்டல் சிறப்பு .. .

ஆக்ஞா சக்கரம்.
---------------------------

ஊர்க்கமா மயேஸ்பரத்தின் பத்தியை விட்டு
உயர்ந்தேறி பதினோரங் குலமேலேறே
-போகர் வயித்திய காவியம்௧௧௧௧ 1o000 பாடல் 63

மேலேறி ரண்டு புருவமத்தியில்
மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
வாலேறி வட்டமாம் வீடுபோலே
வளையமொன்று ரண்டிதழ்தான் ஷா ஷிரி வாகும்
ஆளேறி அங்கென்ற அச்சரந்தான்டுவே
ஆகாச பூதமாம் பூத பீசம்
மாலேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார்
மவத்தை தான் சாக்கிரத்தின் வீடுமாமே
-போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 64

பூணவே வட்டமத்தின் நிறந்தான் சொல்வேன்
புதுமை வெகுபுதுமையட ஆகாசந்தான் .
அகத்தியர் வாத சௌமியம் . பாடல் 70

விலங்ககின்ற தொழிலதுதான் காம குரோதம்
வாடுமாம் லோபமொடு மோகமாகும்
மதமான மாச்சரியத் தோடஞ்சாகும
நாடு தான் முகன் மாலுஞ் சிவன் மயேசன்
நலமாக காப்பார்கள் திகைத்து தானும் .
தாடுசதா சிவன் றானுந் தளவாயாகும்
தளவாயைக கண்டாக்கால் சகலமாமே
-போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 65

மூட்டியே தாயுனுட பதததை கண்டால்
முஷ்கரமாய் மாயகைஎல்லாம் மொழிந்து போகும்
நாட்டியே எட்டுடன் நாளும் கூட்டு
நாதாந்த சித்தியெல்லாம் சனத்திலாகும்
மாட்டியே தமருக்குள் புகுதலாகும் .
மயிர் பாலம் நெருப்பாறு கடக்கலாகும் .
நீட்டியே நிராதாரம் அறியலாகும்
நிச்சயமாய் குறிகள் எல்லாம் அறியலாமே .
-போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 6௮

நினைக்கவே ஐம்புலனும் மொடுனங்கிபோகும்
நோய் மூப்பு சாக்காடு நரை திரையும் போகும்
கனைக்கவே காயசித்தி வாதசித்தியும் காணும்
கண்ணிமைக்குள் போறஉயிர் கடுகி மீழும
அணைக்கவே சாக்கிரத்தில் இருந்து கொண்டு
ஆயியோடு அப்பனுந்தான் கூத்து பார்த்து
தளைக்கவே சரியையோடு கிரியை யோகம்
சார்ந்த தோர் ஞானமெல்லாம் தானானாரே
-போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 69

போமப்பா சகலபிணி ரோகமெல்லாம்
பூரனச்சந்திரனுட பிறப்பை கண்டால்
காமப்பால் கானர்பால் கருணை தங்கும்
கலையான வாசியது கடக்காதப்பா
சொமப்பால் சொலிக்குமடா அந்தபாலை
அந்தமுடன் நித்தியமும் கொண்டாயாகில்
தாமப்பா தன்னிலையே தான் தானாகும்
தானான ஆதார மூலம் பாரே
-போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 70

பொருள் ::
அமைவிடம் .
மகேஸ்வரன் தலமாகிய விசுக்திக்கு மேல் பதினோரு அங்குலம் மேலே உள்ள தலம் ஆக்ஞா என்ற சுழுமுனை . இது புருவ மதிக்கு உள்ளேம் அன்னாக்கிற்கு மேலேயும் இருக்கும் இடம்

சக்கர அமைப்பு . :
இது வட்ட வடிவ சக்கரம் இதன் இருபக்கத்திலும் இரண்டு தாமரை இதழ்கள் உள்ளன . இதன் நிறம் ஆகாய நீலம் .
பஞ்சவித்துகளில் விந்து தத்துவமாக உள்ளது . இதன் உயிர்சக்தி நான்கு கலை ஆகும் . இதில் நடைபெறும் சுவாசம் நாள் ஒன்றுக்கு 3 0 0 0
பஞ்ச பூதங்களில் ஆகாய பூதமாக இருக்கிறது .

இதன் அதி தேவதைகள் சதாசிவம் மற்றும் மனோன்மணி ஆவார்கள் . சதாசிவன் ஆறு ஆதார தலங்களின் தளபதி ஆவார் . .
அவத்தை என்ற உணர்வு நில்லையில் சாக்கிருத உணர்வு நிலை உடையது .
இதன் தொழில் அருளால்
இத்தளத்தில் நடைபெறுவது காமம் குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் ஆகிய ஐந்து செயல்களாகும்
பதான் சுரப்பிகள் பிடிடறி மற்றும் பினியல் ஆகும் .
மந்திரங்கள் .

ஆகாய பீசமந்திரம் :ஹம
சிவமந்திர எழுத்து .:; ய
இதழ் எழுத்துகள் : : ஷா ஷிரி
ஆதார தளங்களில் முடி மூலம் என்ற மேல் மூலம் இந்த தளமாகும்
விசுக்தி தளத்தில் கும்பகம் செய்து வாசியை மேலே ஏற்றினால் பத்தாம் வாசல் திறக்கும் . வாசி சுழிமுனை அடையும் . இங்கு மனதை நிறுத்தி வாசியோகம் செய்து பூரணம் என்ற வாலை என்ற மனோன்மணி தாயை காண வேண்டும் இதற்க்கு எட்டுடன் நான்கு சேர்க்கவேண்டும்
. மூலாதாரத்தில் ,வாசி யோகத்தில் தார கலை நான்கு உருவாக்கி அதன் பிரயோகத்தில் உடலுள் எட்டு கலை உருவாக்கி இரண்டு சேர்ந்து 12 கலை உருவாக்கு . . 

இதனால் சுழி முனை நாடி உருவாகும் அதன் வழி குண்டலி மேலே ஏறும்
. அதனால் வாலை ஒளி உருவாகும் . இந்த வாலை ஒளி மூலாதாரம் முதல் சுழிமுனை. வரை நீண்ட ஒளிபிழம்பை உருவாக்கும் . இந்த ஒளி பிழம்பு நெருப்பு ஆறு எனப்படும் . இந்த நெருப்பு ஆறு மயிர் பாலம் என்ற இரண்டு புருவ மததியை கடந்து சகஸ்ராரம் செல்லும்
அங்கு இருந்து அமிர்தத்தை உருவாக்க தூண்டும் .

இதனால் சுழிமுனை என்ற ஆக்ஞா தளத்தில் அமிர்தம் சுரக்கும் . இந்த அமிர்தம் கீழிறங்கி உல்நாக்குக்குள் இருக்கும் துவாரம் வழி தொண்டைக்குள் விழும். மரணம் என்ற சாக்காடு அழியும் .
இதனால் நோய்கள் நீங்கும் . மூப்பு நீங்கும் . நரைத்து வெழுத்த முடி கறுப்பாகும் . திரை என்ற கண் மறைப்பு திரை அகலும் . ( காட்ராகட் ) சுறுக்கம் மறையும் .. ஐந்து புலன்களும் அடங்கும் . சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கும் . இது .. வாசி மேலே ஏறுவதால் நிராதார தலம் என்னும் சகஸ்ரர தலம் தெரியும் ..
சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கும் கைகூடும் . காயசிததி , வேதைசிததி , யோகசித்தி , ஞான சித்தி ஆகி அனைத்து சிததிகழும கைகூடும் ..

சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம்
---------------------------------------------
--------------

மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை ஆறு தளங்களும் உடலுக்கு உள்ளே இருப்பவை . . எனவே இவற்றை ஆதார தலம் என்று அழைக்கப்படும். சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம் உடலுக்கு வெளியே இருக்கிறது எனவே இதை நிரராதார தலம் என்று சொல்லப்படும் இந்த தலமே நம்மையும் இப்பிரபன்ச்சத்தையும் இணைப்பது. நம்மை சுற்றி பிரபை என்ற ஒளி உருவை ஏற்படுத்துகிறது . 

ஆங்கிலத்தில் aura ...... ஆரா என்று அழைக்க படுகிறது .
நமது தியான நிலைக்கு ஏற்ப இந்த பிரபையின் நிறம் பட்டை அகலம ஆகியவை மாறும் . இதை கிம்பர்லின் போடோ கிராப் என்ற முறையில் படம் பிடிக்க முடியும் . இதை போன்றே நமது மூலையில் ஏற்படும் அலை வரிசையை எலெக்ட்ரோ என்செபிலோக்ராபி
Electroencephalography
என்றமுறையில் பதிவு செய்ய முடியும் .

எனவே சித்தர்கள் சொல்கிற ஆதார தளங்களும் சக்கரங்களும் இன்று அறிவியல் உத்திகொண்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது . . எனவே வாசி யோகா மகிமை அளவிடட முடியும் . யாரும் ஏமாற்ற முடியாது .. மேலும் ஒரு வாசி யோகி முன் அமரும் போது அல்லது அவர் வாசி உருவாக்கும் போது அதன் தாக்கத்தை நீங்கள் உணர்கிறீர்கள்.. சிலர் விவரிக்க முடிய வில்லை என்கின்றனர் . இவை அவரின் பிரபையின் சக்தி .. .
சித்தர்கள் சகஸ்ரார தலம் பற்றி சொல்வதை பார்ப்போம்.

தானான மனோன்மணியை தாண்டி அப்பால்
தனித்ததோர் எட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதம்தான் கூட்டிப்பாரு
குறிப்பான இதழ்களோ மாயிரத்தெட்டு
ஆனான நாடு மையம் ஐங்கோணமாகும்
ஆகாரம உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து அஞ்சும்
நலத்த வைங்கோனத்தில் நிற்கும் பாரே
-போகர் 1000 பாடல் 70

பார்க்கவே உகாரமாய் நடுமையத்தில்
பரிசுத்த வொளியாகி உதிக்கும் பாரு
பார்க்கவே நிகாரத்த நிர்மலன்றன் வடிவாம்
பார்த்ததொரு வாசினத்தான் அதற்குள் வைத்து
நேர்க்கவே யோடாமல் நிறுத்திப்பாரு
நிலையாத பிறவியறும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தி
யனாதிஎன்ற பொருலொருவர்க் கறியொன்னாதே
-போகர் 1000 பாடல் 71 .

அமைவிடம் மற்றும் .பயன்
மனோன்மணியின் தலம் என்ற ஆக்ஞா தளத்தில் இருந்து எட்டு விரல்கடை உயரத்தில் தலைக்கு மேல் நான்கு விரல் கடை உயரத்தில் சகஸ்ராரா அல்லது பிரம்ம ரந்திரம் என்ற தலம் உள்ளாது . 

ஆகையால் உடலுக்கு வெளியே உள்ளது . ஆயினும் உடலையும் பிரபன்ச்சத்தையும் இணைக்கும் .
இதுவே பரிசசுத்த வெளியின் ஆரம்ப நிராதாரதளம் . 

உடலின் குற்றங்கள் இங்கு இல்லை . இறைவநின் வேதாந்த வடிவான அநாதி வடிவு இந்த தலம் . பூரணம் என்ற ஒளி யாகிய அநாதி ஆகிய இறைவனை இங்கு தரிசிக்கலாம் ..

வாசியோகத்தில் இறைவனை ஒளிவடிவில் இங்கு தரிசித்தால் பிறவி இல்லாமல் போய்விடும் . சமாதி நிலை அடைய கூடிய தலம் பேரானந்த போதம் தரும் இடம் .
. வாசி யோகத்தில் இந்த தலத்திற்கு மேலே உள்ள முப்பாழ் சென்று அதை தாண்டி பரவெளி செல்லும் யோகநிலை மௌன யோகம்
இத்தளத்தில் இருந்து மீண்டும் கீழே உள்ள ஐந்து ஆதாரங்கள் இறங்கி மீண்டும் மூலாதாரம் அடைவது . பிடரி மார்க்கம் எனப்படும். . 

உருவ அமைப்பு
ஐந்து கோணம் உடைய நட்சத்திரம . அதை சுற்றி ஆயிரத்து எட்டு தாமரை இதழகள் உள்ளன .
பூதங்கள்
மண், நீர், நெருப்பு, காற்று ,ஆகாயம் ஆகிய அயிந்து பூதங்கள் ஒடுங்கி உள்ள தலம் .

வித்துகள்
அகார, உகார,மகார ,நாத, விந்து ஆகிய பஞ்ச வித்துக்களின் ஒடுக்கம் இத்தளம் .
நிறம்:: துய ஒளி
பீஜ மந்திரம் ;;; ஓம
அதி தேவதை :: பராபரன் பராபரை

தொழில்::::படைத்தல் , காத்தல் , அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் செய்யும் இடம் . வாசி யோகத்தில், இந்த தளத்தில் இருந்து அருள் ஆசி வழங்கினால் அது சித்திக்கும் .
****************************
இதை அவசியம் குரல் பதியவும்.              .       வணக்கம். கருத்து கோபாலக்ருஷ்ணன் சித்தர். குரல் அன்னாரது தலைமை சீடர் வசந்தா. தலைப்பு: *வாசி*  கடவுள் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஒளி என்று பெயர;. பஞ்ச பூத சக்திகளின் கூட்டிணைவால் அவ்வொளி நம் உடலுக்குள் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதத்தில் காற்றே மிக உன்னதமானது. இதனைக் கொண்டே சித்தர்கள் சாகா நிலையை அடைந்தனா;. அக்காற்றைப் பிடிக்கும் கலையைப் புண்ணிய ஆத்மாக்களுக்குப் பயன்படும் விதம் தம் செய்யுளில் பாpபாசையாகச் சொல்லி வைத்துள்ளனர். ஸ்ரீகாகபுசுண்டர் தொடங்கி வள்ளலார் வரையிலும் வாசியைப் பாடாத சித்தர்கள் இல்லை எனலாம் அதுபற்றி இனி!
வாசி என்றால் என்ன?
பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியே உள்சென்று சக்தியைக்கொடுக்கிறது. வாசி என்பது மூலாதாரத்தில் இருந்து தலையின் உச்சி வரை உள்முகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர்க்காற்று. இது மூக்கின் வழி வாரா. சித்தர்கள் தங்கள் உடலைக் காயகல்ப உடலாக மாற்றிக் கொள்வதற்கும் இறப்பில்லாமல் வாழ்வதற்கும் எங்கும் பறந்து செல்வதற்கும் அக்காற்றையே அவர்கள் இலயமாக்கிப் பயன்படுத்திக்கொண்டனர் நம் உடலில் உள்ள தசவாயுக்கள் :
1.பிராணன் 6.நாகன்
2.அபாணன் 7.கூh;மன்
3.வியாணன்
8.கிருகரன்
4.உதானன்
9.தேவதத்தன்
5.சமானன்
10.தனஞ்செயன்
என்பனவாகும். இதில் தனஞ்செயன் என்ற வாயு மட்டும் குழந்தையை உந்தித்தள்ளி பிறக்க வைத்துப் பின்பு அது மூலாதாரத்தில் ஒடுங்கியே கிடக்கும். இது மனிதன் இறந்த பின்பு அவ்வுடலை வீங்கவைத்துச் சிதைத்துத் தலைவழியே வெளியேறும். உயிருஉள்ள போதே அக்காற்றைக் கிளப்பி அதனைப்பயன்படுத்திக் கொள்வதே வாசி எனும் யோகம் ஆகும்.
'உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள்தாத்த நாதா;பாதம் அம்மைபாதம் உண்மையே”
(சிவவாக்கியா; பா:126)
இங்கே 'உரு' தாpப்பதற்குத் தனஞ்செயன் என்ற வாயுவே காரணம.; இதுவே பிறப்புறுப்புக்குக் கீழே மூலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் அதனைக் கபாலத்தில் ஏற்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்கிறாh; சிவவாக்கியா;. மேலும் மூலாதாரத்தில் அக்கினியாய் ஒளிh;ந்து கொண்டிருக்கும் குண்;டலினி சக்தியை மேலே கிளப்பி அதனையே தியானித்து வந்தால் எல்லா சித்திகளும் பெறலாம் என்பதை
'பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடா; ”
(திருமந்திரம்,3ஆம் தந்திரம்)
என்கிறாh; திருமூலா;.
வாசியை இலயமாக்கும் முறை:
வாசி என்பது சித்தர்கள் மட்டுமே செய்து வந்த அற்புதக் கலை. அதனைச் சாகாக்கலை, வேகாக்கால் என்று அழுகணிச் சித்தர் குறிப்பிட்டுள்ளாh;. இந்தக் கலையைத் தீயவா;கள் பயன்படுத்தா வண்ணம் பாpபாசையாகத் தம்நூலில் சொல்லிவைத்தனா; அதனை நானும் வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை ஆகவே சில விளக்கங்களை மட்டுமே கூறியுள்ளேன். காகபுசுண்டா; இயற்றிய பெருநூல் காவியம் 1000 என்ற நூலில் வாசியை அழகாக எடுத்து இயம்பியுள்ளாh;. உணவில் விருப்பம் கொண்டு உண்டு திhpபவனுக்கு வாசி என்பது எட்டாக்கலையாகும். யோக சாதனையில் இருக்கும் யோகிக்கு உணவு கட்டுப்பாடு அவசியமானதாகும்.
'தௌ;ளாத மாந்தருக்குத் தவிடுமில்லை
தீனி குறையாதவா;க்கு வாசியில்லை”
(காகபுசுண்டா; பா:72;அ-3)
ஆகையால் உணவில் ஒரு கட்டுப்பாடும் திடமான உள்ளமும் கொண்டு விடாமுயற்சியுடன் செய்யும் ஒரு பயிற்சி முறைதான் வாசி யோகம்
'வாசிப் பழக்கம் அறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும் ”
(கொங்கண நாயனாh; பா:28;அ-1)
என்று வாசியின் அவசியத்தைக் கொங்கண நாயனாh; வலியுறுத்துகிறாh;.வாசி ஒன்றே மனிதனை நோயிலிருந்து காக்கும் . அதுவே என்றும் இளமை தரும் மாமருந்து வாசியை இலயமாக்கும் மந்திரத்தைத் தௌ;ளத்தெளிவாக
'ஆகீPகூவென்றே யுரைத்த அட்சரத்தில் ஆனந்தம்
யோகியோகி என்பா;கோடி உற்றறிந்து கண்டிடாh; ”
(சிவவாக்கியா; பா:450;அ-1-2)
என்று சிவவாக்கியா; சுட்டிக்காட்டுகிறாh;. அஇ உஇ இ என்ற மூன்று எழுத்தே மந்திரம் ஆகும். இம்மந்திரத்தைச் சொல்லி வாசி என்னும் குதிரையை ஓட்டிப் பழக வேண்டும். அஇ உ இதுவே சித்தர்கள் சொன்ன எட்டு இரண்டு மந்திரம் தமிழ் எண்முறையில் இதனை அறிந்து கொள்ளலாம். அகரமும் உகரமும் உடலில் சூhpய சக்தியாகவும் சந்திர சக்தியாகவும் செயல்படுகின்றன. இம் மந்திரத்தைப் பயன்படுத்தியே தனஞ்செயன் என்ற வாயுவைக் கிளப்ப வேண்டும்.
'எட்டிரண்டு மொன்றுமது வாலை என்பாh;
இதுதானே பாpதிமதி சுழுமுனை என்பாh; ”
(கருவு+ராh; பா:24;அ-1)
அங்ஙனம் கிளம்பும் வாயுவானது மேலே பாம்பைப் போல் சீறிப்பாய்ந்து உண்ணாக்கைத் தாக்கும். அங்கிருந்தே அது கபாலம் ஏறி ஒளியுடன் சோ;ந்து நடம்புhpயும் இதனையே புறவுலகில் அனைவரும் அறியும்வண்ணம் அரச மரத்தடியில் பாம்புச்சிலையை வடித்து வைத்தனா.; (ஓசோன் என்கிற சுத்தக் காற்றை அரசமரமே தரவல்லது).
'கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உண்புதுமை மெத்த உண்டு ”
(அழுகணி பா:20;அ-1-2)
உண்ணாக்கு வழியே மேல் ஏறும் காற்றே வாசி இப்பொழுது மூக்கின் வழியே சுவாசம் இருக்காது. ஆனால் வாசி மட்டும் இயங்கிக்கொண்டே இருக்கும் நாசி செய்யாதனவற்றை எல்லாம் வாசி ஒன்று மட்டுமே செய்து விடும் . அக்காற்றே உடல் முழுதும் பரவி பரவச நிலையை அடைய வைக்கும் அந்நிலை அடைந்தவரைச் சுற்றியே மென்காந்த அலை பாயும் அதுதான் ஆன்ம சக்தி சித்தர்களின் ஜீவ சமாதியில் நாம் ஏகும்போது அந்நிலையை நாம் உணர முடியும் .இத்தகைய வாசி நமக்குள்ளே அடங்கும் விதத்தைச் சிவவாக்கியா;
'நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லீரேல்
ஓடி ஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பீரே”
(சிவவாக்கியா; பா:275)
என்கிறாh;. வாசி இலயமாகி நமக்குள் ஒடுங்கிவிட்டால் எம பயமின்றி கோடி கோடி காலம் எந்தக்குறையும் இல்லாது வாழ முடியும்.
வாசியைத் தடுக்கும் எமன்: ஸ்ரீபோகா; தம்முடைய போகா; 7000 என்ற நூலில் வாசியைக் குறிப்பிடும் பொழுது
'ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைத்தள்ளி
அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம் நீக்கு
வாட்டியே ஐம்புலனை வாளால் வீசு
மறவாதே இரவுபகல் வாசி வாட்டே”
(ஸ்ரீபோகா; பா:28;அ-3-4)
என்று வாசி வேலை செய்யும் முறையைக் குறிப்பிடுகிறாh;. அ உ என்ற இரண்டு மந்திரத்தால் வாயின் உள்ளே இருக்கும் அண்ணாக்கை ஆட்டினால் அங்கிருக்கும் கபநீh; எல்லாம் வெளியேறிவிடும் அதுதான் வாசி மேலே ஏறாவண்ணம் தடுத்துக்கொண்டிருக்கும். அந்தக்கப நீரை வெளியேற்றினால் வாசி கபாலம் ஏறி இலயமாகும். இந்தக் கப நீரையே கோழை என்றும் எமன் என்றும் சொல்லி வைத்தாh;கள.; இது அதிகமாகும் போது மனிதன் இறப்பை எய்துகிறான் ஆனால் வாசியோகம் இக்கோழையை எடுத்துவிடுவதால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம்.+அகரத்தையும் உகரத்தையும் ஓதும் முறைகளைப் புசுண்டரும் சிவவாக்கியருமே தம்நூலில் கூறி வெளிப்படுத்தினா;.
அம்மந்திரம் வேட்டைக்காரன் குணுகுணுத்த மந்திரம் என்று பாpபாசையாகச் சொல்லிவைத்தாh;. வேட்டைக்காரன் பேச்சு எப்படி அமையுமோ அப்படித்தான் இம்மந்திரத்தை உச்சாpக்கவேண்டும். ஸ்ரீபோகா; இவ்வாசியை வைத்தே மலைமீது தாவினாh; என்று ஸ்ரீபுசுண்டா; தம்நூலில் சான்று பகா;கிறாh;.
பிராணாயாமமும் வாசியும் ஒன்றல்ல:
பிராணாயாமம் என்பதனையே பலரும் வாசியென்று நினைத்துக்கொண்டுள்ளனா; அது தவறான எண்ணம் மனிதா;கள் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறாh;கள்
'போற்றியே சரமென்ற கணக்கின் போதம்
இருபத்தோ ராயிரத்து அறுநூ றோh;நாள்”
(ஸ்ரீகோரக்கா; பா:34;அ-3)
அதனைக் குறைத்துக்கொள்ளவும் காற்றிலுள்ள உயிh;ச்சக்தியின் மூலம் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி ஆயுளைத் தள்ளிப் போடவும் இந்தக்காற்றைப் பிடிக்கும் கலையைச் சித்தர்கள் போற்றி அருளினா.; இது வெறும் மூச்சுப்பயிற்சியே ஒழிய வாசி ஆகாது. இதனையும் கணக்கறிந்தே பழகவேண்டும் அவ்வாறு இல்லையேல் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். வாசி என்பது உடலை வறுத்திச் செய்யும் ஒரு யோகம் ஆகும்.
வாசியும் தவமும்:
வாசி இலயமானதும் நாம் தவநிலையில் அதனை ஓடவிடவேண்டும் ஏனெனில் வாசியை நம் கட்டுக்குள் வைக்க தவமே சிறந்த வழி
'சித்திரம் போலே யிருந்து வாசி பாரு”
(காகபுசுண்டா; பா:73;அ-3)
என்கிறாh; புசுண்டா;. அசைவற்ற நிலையில் இருந்து வாசியை மனதால் பாh;க்கவேண்டும். நெஞ்சிலே இருத்தி நெருங்கி ஒடும் வாயுவை என்கிறாh; சிவவாக்கியா;. ஸ்ரீகோரக்கநாதா; சந்திர ரேகை என்னும் நூலில் ஒரு யோகி அசைவற்று நெஞ்சு நிமிh;ந்து ஆசனத்தில் அமா;ந்து வாசியை நோக்கவேண்டும் என்கிறாh;.
'வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை ”
(கம்பளிச் சட்டைமுனி பா:13;அ-1)
ஆகவே வாசியை மவுனம் என்ற வித்தையில் சோ;த்தால்தான் அது அட்டமாசித்திகளைப் பெற்றுத் தரும். வாசியை இலயமாக்கும் விதமும் அதனைத் தக்க வைத்துப் பயன்பெறும் விதமும் இதுவே ஆகும்.
'நாக்கு வாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில் மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும்; வாpசை காணே”
(வால்மீகா; பா:12)
இது வால்மீகா; ஞானம் என்ற நூலில் ஸ்ரீவால்மீகா; சொன்ன தவமுறையாகும். இம்முறையன்றி வேறு எவ்வழியிலும் வாசியைப் பெற முடியாது இதுவே சித்தர் வழி. வாசி எனும் உயிh;க்காற்றைப் பிடித்துச் சித்தர்பெருமக்கள் இறவாநிலை எய்தினா;. ஆகவேதான் அனைவரும் ஒன்றுபோலவே இதனைத் தம்நூலில் பதிவுசெய்தனா;.
மதம் கடந்த நெறி:
சிவனை வழிபாடுசெய்து சைவ மதத்தைப் பின்பற்றியவர;களே பதினெண் சித்தர;கள் என்று பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர;. உண்மையில் சித்தர;களுக்கு மதம் என்பதே இல்லை. சைவம்,பூசை என்று அவர;கள் சொல்வதெல்லாம் பரிபாசையே அன்றி வேறொன்றுமில்லை. அய்ன்ஸ்டின் என்கிற விஞ்ஞானி தான் கண்டறிந்த உண்மையை   ஒரு குறியீடாக எழுதி வைத்தார; இன்றைக்கு எல்லோரும் அதனைப் படிக்கிறோம் ஆராய்ந்து பட்டமும் பெறுகிறோம்.அவர; கிறித்துவர; என்பதால் யாரும் நிராகரித்து விடவில்லையேஅது போலவே ஓம் என்பதும் நமசிவய என்பதும் ஒரு குறியீடாகச் சித்தர;கள்
எழுதிக்காட்டி லிங்கத்தையும் வைத்து உண்மைப்பொருளைச் சுட்டிக்காட்டினர;. இவ்வனைத்தையும் அவர;களின் பாடல்களை ஆராய்ந்தால் உண்மையினைக்கண்டு தெளியலாம.;
முடிவுரை:
நாம் நல்ல முறையில் வாழவும் பிறவியின் பயனை அடையவும் சிறந்த நெறிகளைச் செய்யுள் வடிவாகச் சித்தர்பெருமக்கள் அருளியுள்ளனா;. அதனை நாம் படித்து உண்மைப் பொருளைக் கண்டுதெளிந்து சித்தர் நெறியில் வாழ்ந்து பயன்பெறுவோமாக.